சிம்புவிடம் லவ் பண்ணலாமா.. வேணாமா.. என கேட்ட ரசிகை... நான் இவங்களை தான் லவ் பண்ணுறேன் ஓப்பனாக சொன்ன சிம்பு!!

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு முதல் நாள் வந்ததுமே ரசிகை ஒருவர் சிம்புவிடம், லவ் பண்ணலாமா வேணாமா என கேள்வி  கேட்டதற்கு , ஓப்பனாகவும், கூலாகவும் அவர் அளித்த பதில் அனைவரையும் கவர்ந்து விட்டதாம்.

சிம்புவிடம் லவ் பண்ணலாமா.. வேணாமா.. என கேட்ட ரசிகை... நான் இவங்களை தான் லவ் பண்ணுறேன் ஓப்பனாக சொன்ன சிம்பு!!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்தகட்டமாக தான் இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி உருவானது.  இந்நிகழ்ச்சியை நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். திடீரென இந்நிகழ்ச்சியிலிருந்து கமல்ஹாசன் விலகியதையடுத்து, நடிகர் சிம்பு புதிய ஹோஸ்டாக என்ட்ரி கொடுத்துள்ளார்.

வந்ததுமே போட்டியாளர்களிடம்  பேசிய சிம்பு, அவர்களிடம் இனிமேல் ஃபன் பண்ண வேண்டும் என கேட்டுக் கொண்டார். பிறகு போட்டியாளர்கள் அனைவரையும் தனித்தனியாக சந்தித்த சிம்பு, தான் எதற்காக இந்த ஷோவிற்கு வந்தேன் என்பதை கூறினார்.

அடுத்ததாக மேடைக்கு வந்த சிம்பு, பார்வையாளர்களின் கேள்விகளுக்கு கூலாகவும் ஓப்பனாகவும் பதிலளித்தார். அந்த வகையில் முதலில் கேள்வி கேட்ட ரசிகை ஒருவர், அவரின்  படங்கள் பற்றி கேட்டார். அதற்கு பதிலளித்த சிம்பு, தற்போது வெந்து தனிந்தது காடு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். கொரோனா, லாக்டவுன் காரணமாக ஷுட்டிங் தள்ளிப் போனது. இன்னும் ஒரு வாரம் எடுக்கப்பட வேண்டிய ஸ்டன்ட் காட்சிகள் மட்டும் மீதமுள்ளது. அதை முடித்த பிறகு நான் தாடி வளர்க்க வேண்டும். தாடி வளர்ந்ததும் பத்து தல படத்தில் நடிப்பேன். பிறகு கொரோனா குமார் நடிக்க வேண்டும் என்றார்.

இப்படி அடுத்து அடுத்து கேள்விகளை ரசிகர்கள் எழுப்பிக்கொண்டிருக்க, அப்போது சட்டென எழுந்த ஒரு ரசிகை, லவ் பண்ணலாமா வேணாமா என பாட்டு பாடியபடியே லவ் பண்ணலாமா வேணாமா என கேட்டார். இதை சற்றும் எதிர்பார்க்காத சிம்பு, நீங்கள் பாட்டு பாடுகிறீர்கள் என நினைத்தேன். லவ் பண்ணலாம் பிரச்சனை இல்லை. ஆனால் நாம் யாரை லவ் பண்ணுகிறோம் என்பது ரொம்ப முக்கியம். ரசிகர்கள் இருக்கும் வரை நான் ரசிகர்களை லவ் பண்ணுவேன் என்றார். அப்படியும் விடாத அந்த ரசிகை, நீங்கள் இருக்கும் வரை நாங்க உங்களை மட்டும் தான் லவ் பண்ணுவோம் என்றார்.

இது கூட பரவாயில்லங்க...ரசிகர்கள் தான் இப்படியெல்லாம் கேட்கிறார்கள் என்று பார்த்தால், போட்டியாளர்களும் அவர்கள் பங்குக்கு சிம்புவிடன் பேசியுள்ளனர். அதாவது போட்டியாளர்களை சிம்பு தனியாக அழைத்து  பேசிய போது, அபிராமி, சிம்புவை பார்க்கும் போது வெட்கம் வெட்கமாக வருது என்று குலைந்து பேசியுள்ளார். அவரைத் தொடர்ந்து வந்த சுருதி, எனக்கு வார்த்தையே வரல சார்..ஏதாவது பேசிகிட்டு இருப்போமே. அதுக்குள்ள போகனுமா என கேட்டு சிம்புவிடம் ஜொள்ளு விட்டு பேசியுள்ளார்.