கல்யாண சமாச்சாரம்... குழம்பும் ரசிகர்கள்.. குழப்பி வரும் பிரேம்ஜி!!

பிரேம்ஜி, திருமண விஷயத்தில் அனைவரையும் குழப்பி வருகிறார். இவர் அடிக்கடி முடிவை மாற்றுவதால் சினிமா வட்டாரங்கள், ரசிகர்கள் என அனைவரும் குழம்பி வருகின்றனர். இவர் என்னதாம் சொல்ல வாராரு.. கல்யாணம் பண்ணுவாரா? மாட்டாரா? என்று அனைவரும் கேட்டு வருகின்றனர்.

கல்யாண சமாச்சாரம்... குழம்பும் ரசிகர்கள்.. குழப்பி வரும் பிரேம்ஜி!!

இசையமைப்பாளர் கங்கை அமரனின் இளைய மகன் பிரேம்ஜி. நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பல திறமைகளை கொண்ட இவருக்கு 42 வயதாகியும் இன்னும் இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.. அவருக்கு திருமணத்தில் விருப்பமில்லை என கூறிவருதாக கூறப்பட்டது.

திருமணம் பற்றி பிரேம்ஜியின் குடும்பத்தினர் அவரிடம் பேசி அவரை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தனர். பிரேம்ஜி ஓகே சொன்னதால், பெண் பார்த்து முடிவு செய்துள்ளனர். விரைவில் பிரேம்ஜிக்கு திருமணம் என கங்கை அமரன் அறிவித்திருந்தார். ஆனால், இது குறித்து பிரேம்ஜி எதுவும் தெரிவிக்கவில்லை.. 

சமீபத்தில், பிரேம்ஜி தன வாழ்க்கையில் திருமணம் என்பதே இல்லை என கூறினார். பிரேம்ஜியின் இந்த அறிவிப்பால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.. அப்படியென்றால் பெண் பார்த்து ஏற்பாடு செய்தது, கல்யாணத்திற்காக ஏற்பாடு நடைபெறுவது என கூறியது எல்லாம் என்னாச்சி என்று அனைவரும் கேட்க தொடங்கினர்.. 

இந்நிலையில், சமீபத்தில் பிரேம்ஜி.. பாடகி வினய்தா என்பவரை காதலிப்பதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்யபோவதாகவும் தகவல் வெளியானது. மேலும், பிரேம்ஜியுடன் இருக்கும் போட்டோவை பாடகி வினய்தா சமூகவலைதளபக்கத்தில் வெளியிட்டார்.

இது குறித்து பிரேம்ஜியிடம் கேட்டபோது, என்னக்கு திருமணம் செய்யும் எண்ணமே இல்லை.. திருமணம் செய்ய நினைத்திருந்தால் 10 ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் செய்திருப்பேன் என்று தெரிவித்தார். மேலும் என வாழ்க்கையில் திருமணம் என்று ஒன்று இல்லை என்பதில் நான் தெளிவாக உள்ளேன் என்றும் கூறினார்.