” சாதியை ஒழிக்க இன்னும் முனைய வேண்டும்” - கவிஞர் வைரமுத்து.

” சாதியை ஒழிக்க இன்னும் முனைய வேண்டும்”  -  கவிஞர் வைரமுத்து.

நவீன இந்தியாவில், சாதி ஒழிப்பை சாத்தியமாக்க இன்னும் முனைய வேண்டும் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

சென்னை பெசன்ட் நகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

“சாதியை ஒழிக்க வேண்டிய கல்விக் கூடங்களில்,சாதி தலைத் தூக்குவதை பொறுத்துக் கொள்ள முடியாது என்று கூறினார்.

மேலும், தமிழ்நாட்டுப் பெண்கள் தங்கள் பெயருக்கு பின்னால் சாதி பெயரை சேர்ப்பதில்லை என்றும், இது கல்வியால் கிடைத்த முன்னேற்றம் என்றும் கூறினார்.

அத்துடன் சாதியை ஒழிக்க இன்னும் முனைப்பு காட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.  

இதையும் படிக்க   | "செய்திகள் வேகமாக பரவுவதாலேயே சாதிப் பிரச்சினைகள் உருவாகின்றன" - நடிகர் சரவணன்.