விக்ரம்-2 புதிய அறிவிப்பை வெளியிட்ட இயக்குநர்!

இந்தியன்-2 பட விவகாரம் காரணமாக லைகா நிறுவனம்,  இயக்குனர் ஷங்கர் ஆகியோருக்கிடையேயான மோதல் கோர்ட்டில் உள்ளது. 

விக்ரம்-2 புதிய அறிவிப்பை வெளியிட்ட இயக்குநர்!

இதன் காரணமாக இயக்குனர் ஷங்கரும்,நாயகன் கமல்ஹாசனும்  தனது அடுத்தடுத்த படங்களின் வேலைகளை  தொடங்குவதில் அப்படக்குழுவினர் மத்தியில் தாமதம் மற்றும் குழப்பம் நிலவி வருகிறது. 

கமல்ஹாசனை பொறுத்த வரை இந்தியன்-2 படத்தை உடனடியாக முடித்து கொடுக்க கோர்ட் ஷங்கருக்கு உத்தரவிட்டால், உடனடியாக அப்பட த்துக்கு தனது விக்ரம் படத்துக்காக ஒதுக்கப்பட்ட தேதிகளை இந்தியன்-2 படத்துக்காக  ஒதுக்கி விடுவது என்றும்,இடைப்பட்ட தேதிகளை தனது விக்ரம் பட படப்பிடிப்புக்கு தருவது என்றும் முடிவெடுத்துள்ளார் என்கிறார்கள்.

இதற்கிடையே   கமல்ஹாசன் பாபநாசம் இரண்டாம் பாகத்தில் நடிக்கப் போவதாகவும், அதற்காக ஒரு மாத கால்ஷீட்டை ஒதுக்கி உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது கமல்ஹாசனின் நடிப்பில் பக்கா கமர்சியல்  ஆக்சன் படமாக உருவாகும்  'விக்ரம்' படத்தின் வேலைகளை முழுவேகத்தில் தொடங்கியுள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ்  அதிரடி ட்வீட் ஒன்றையும்  பதிவிட்டுள்ளார். 

மெட்ராஸ், கபாலி,  கேஜிஎஃப்,  கைதி, ராதே,  உள்ளிட்ட பல படங்களுக்கு ஸ்டன்ட் இயக்குநர்களாக பணியாற்றிய அன்புஅறிவு (இரட்டையர்கள்)   விக்ரம் படத்தில் இணைந்துள்ளனர் என்கிற அதிரடி  அறிவிப்பை புகைப்படத்துடன்  வெளியிட்டுள்ளார்.

இதையடுத்து  அறிவிக்கப்பட்டு வரும் ஊரடங்கு தளர்வுகளின் அடிப்படையில் மீண்டும் படப்பிடிப்புகள் நடத்த அனுமதிக்கப்படும் பட்சத்தில் முதலில் விக்ரம் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கோர்ட் தீர்ப்பை பொறுத்து கமல் இந்தியன்-2 படத்திலும் நடிக்கலாம் என்கிறது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வட்டாரம். மேலும்  கமல்ஹாசனிடம், பாபநாசம்-2 திட்டம் எதுவும் இப்போதைக்கு இல்லை என அடித்து சொல்கிறது.