சமந்தாவின் விவாகரத்துக்கு காரணம் அந்த படுக்கையறை காட்சியா..? 

நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்து விவகாரம் குறித்து  கடந்த சில நாட்களாக கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் பெரும் பேச்சாக உள்ளது.

சமந்தாவின் விவாகரத்துக்கு காரணம் அந்த படுக்கையறை காட்சியா..? 

கோலிவுட், டோலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்தார் சமந்தா.

இதன்மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து விண்ணைத் தாண்டி வருவாயா படம் தெலுங்கில் யே மாயா சேசவே என்ற பெயரில் உருவானது. இந்தப் படத்தில் நடிகை சமந்தா லீடிங் ரோலில் நடித்து தெலுங்கில் அறிமுகமானார் சமந்தா.

முதல் படமே அவருக்கு வெற்றிமான அமைந்து பிரபலமானார் நடிகை சமந்தா. இந்த படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விருதையும் பெற்றார். தொடர்ந்து தமிழில் பானா காத்தாடி, மாஸ்கோவின் காவேரி, நீதானே என் பொன் வசந்தம், நான் ஈ, அஞ்சான், கத்தி, பத்து எண்றதுக்குள்ள, தங்க மகன், தெறி, 24, மெர்சல் இரும்புத்திரை, சீமராஜா, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது தமிழில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார் சமந்தா. இதேபோல் தெலுங்கில் ஷாகுந்தலம் என்ற படத்தில் நடித்து வருகிறார் சமந்தா. 

நடிகை சமந்தா கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரபல தெலுங்கு நடிகரும் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக இருவரும் பிரிய உள்ளதாக தகவல் பரவி வருகிறது. திருமணத்திற்கு பிறகு சமந்தா சினிமாவில் நடிக்க மாட்டார் என நினைத்து கொண்டிருந்த வேளையில் அடுத்தடுத்து படங்களில் நடித்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். சொல்ல போனால் திருமணத்திற்கு பிறகு தான் சமந்தாவின் மார்க்கெட் பீக்கில் சென்று கொண்டிருக்கிறது.

நடிகை சமந்தாவும் திருமணத்திற்கு பிறகு கிளாமர் போட்டோ ஷூட்டுக்களை நடத்தி வருகிறார். அதோடு சர்ச்சைக்குரிய கதாப்பாத்திரங்களிலும், படுக்கையறை காட்சிகளிலும் நடித்து வருகிறார் நடிகை சமந்தா.

இந்த காரணத்தால் தான் நாக சைதன்யாவும் சமந்தாவும் பிரிய உள்ளாதாகவும் சில தகவல்கள் வெளிவந்துக்கொண்டிருகின்றன.
இவ்வாறு கிசுகிசுக்க காரணம், சமந்தா, திருமணத்துக்கு பிறகு தனது பெயருக்கு பின்னால் நாக சைதன்யாவின் குடும்ப பெயரான அக்கினேனி என்பதை சேர்த்து இருந்தார். 

சமூக வலைத்தளத்திலும் சமந்தா அக்கினேனி என்றே குறிப்பிட்டு இருந்தார். ஆனால் சில வாரங்களுக்கு முன்பு வலைத்தள பக்கத்தில் அக்கினேனி என்ற பெயரை நீக்கிவிட்டு எஸ் என்ற ஆங்கில வார்த்தையை மட்டும் குறிப்பிட்டார். இதை வைத்தே இருவரும் பிரியப்போகிறார்கள் என்றும்,  விவாகரத்து நடைபெறும் நிலையில் ஜீவனாம்சமாக நடிகை சமந்தாவுக்கு 50 கோடி ரூபாய் வழங்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமந்தா நாக சைதன்யா இடையேயான காதல் ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்து வந்தது. இந்நிலையில் இருவரும் விவகாரத்து செய்து கொள்ள போவதாக வெளியான தகவல் வதந்தியாக இருக்க வேண்டும் என ரசிகர்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் கோரிக்கை வைத்து வருகின்றனர்.