“ஃபைண்டர்” படத்தின்  பரபரப்பான ஃபர்ஸ்ட்  லுக் வெளியானது !!

 “ஃபைண்டர்” படத்தின்  பரபரப்பான ஃபர்ஸ்ட்  லுக் வெளியானது !!

உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் பரபரப்பான திரில்லர் திரைப்படம் “ஃபைண்டர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்  வெளியானது !! 

Arabi production சார்பில் ரஜீஃப் சுப்பிரமணியம்  தயாரிக்க, நடிகர் சார்லி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி வரும் பரபரப்பான திரில்லர் திரைப்படம்  “ஃபைண்டர்”.  தமிழ் திரைத்துறையின் முன்னணி நட்சத்திரங்களான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் நடிகரும்,  இயக்குநருமான எஸ் ஜே சூர்யா ஆகியோர் சமூக வலைதளம் வழியே “ஃபைண்டர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர். 

சிறை பின்னணியில் சார்லி நிற்க, ஒரு திரில்லர் திரைப்படத்திற்கான அத்தனை அம்சங்களும் நிறைந்ததாக  ”ஃபைண்டர்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்ளது. அமெரிக்காவில் செய்யாத குற்றத்திற்காக நீண்ட காலம் சிறையில் இருப்பவர்களை கண்டுபிடித்து அவர்களை நிரபராதிகள் என நிரூபித்து அதற்கு அவர்களுக்கு அரசாங்கம் தரும் இழப்பீட்டு தொகையை பாதிக்கப்பட்டவருக்கு பெற்றுத்தரும் நிறுவனத்தை பற்றிய உண்மை கதையின் அடிப்படையில், சென்னை பின்னணியில்  இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க : ஆளுநருக்கு கடிவாளம் போடாவிட்டால்...தமிழ்நாட்டு மக்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்! மத்திய அரசுக்கு முதலமைச்சர் எச்சரிக்கை!

இருக்கை நுனியில் ரசிகர்களை நிருத்தி வைக்கும் பரபரப்பான திரில்லராக உருவாகும் இப்படத்தை, இயக்குநர் வினோத் ராஜேந்திரன் இயக்குவதோடு,  இப்படத்தில் முக்கியமான வேடத்திலும் நடித்துள்ளார். நடிகர் சார்லி கதையின் திருப்புமுனை பாத்திரத்தில் நடிக்கிறார்.  இவர்களுடன் செண்ட்ராயன், அபிலாஷ், கோபிநாத், சங்கர் நடிகை பிரானா ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ளனர். 

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், “ஃபைண்டர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியான நிலையில், இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.