மருமகன் தனுஷூக்கு ரஜினிகாந்த் கொடுத்த மறக்க முடியாத கிஃப்ட்...! அதை இனிமேல் வைத்திருப்பாரா தனுஷ்...?

மருமகன் தனுஷூக்கு ரஜினிகாந்த் கொடுத்த மறக்க முடியாத கிஃப்ட்...!  அதை இனிமேல் வைத்திருப்பாரா தனுஷ்...?

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்களது 18 ஆண்டுகால திருமண பந்தத்தை முறித்துக் கொள்வதாக சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தனர். முன்னதாக நடிகர் தனுஷ் ஐஸ்வர்யாவை தான் பிரிய முடிவு செய்திருப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதேபோல் ஐஸ்வர்யாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதனை அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பு ரஜினியின் குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல் ஒட்டுமொத்த திரையுலகினரையும், ரசிகர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியது. அதனைத்தொடர்ந்து திரைபிரபலங்கள் அனைவரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மருமகன் தனுஷுக்கு கொடுத்த மறக்க முடியாத கிப்ட் குறித்த தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி தனுஷ், ஐஸ்வர்யாவை திருமணம் செய்த பின்னர் ரஜினியும் தனுஷும் மாமனார்-மாப்பிள்ளை உறவையும் தாண்டி மிகவும் நெருக்கமானார்கள் என்றும், இதனைத்தொடர்ந்து தனுஷ் ஒரு சிவ பக்தர் என்பதால் அவருக்காக இமயமலையிலிருந்து பிரத்யேகமாக வரவழைக்கப்பட்ட ருத்ராட்ச மாலையை ரஜினி அவருக்கு பரிசாக அளித்தார் என்றும், அந்த ருத்ராட்ச மாலை வந்த பின்னர்தான் தனுஷின் திரை உலக வாழ்க்கை உச்சத்துக்கு சென்றதாகவும் தகவல் தெரிவிக்கிறது.

மேலும் பல புகைப்படங்களில் ரஜினி கொடுத்த ருத்ராட்ச மாலையை தனுஷ் அணிந்து இருப்பதையும் ரசிகர்கள் கவனித்திருக்கலாம். இந்த நிலையில் ஐஸ்வர்யாவை தனுஷ் பிரிந்தாலும், அந்த ருத்ராட்ச மாலையை தொடர்ந்து அவர் அணிந்து இருப்பார் என்று அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர்.