தியாகமே அவரை  முதல்வராக உயர்த்தியுள்ளது...!!  சிவகாா்த்திகேயன்...!!

தியாகமே அவரை  முதல்வராக உயர்த்தியுள்ளது...!!  சிவகாா்த்திகேயன்...!!

ஸ்டாலின்  தியாகமே அவரை  முதல்வராக உயர்த்தியுள்ளது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகா் சிவகாா்த்திகேயன் புகழாரம் சூட்டியுள்ளார்.
 

திருச்சி மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் 70 வது பிறந்தநாளை ஒட்டி 'எங்கள் முதல்வர் எங்கள் பெருமை'  என்ற தலைப்பில்  முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் அவர்களின் வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சி திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரி வளாகத்தில்  கடந்த 23ஆம் தேதி துவங்கி வரும் 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இக்கண்காட்சியை அமைச்சர் கே .என். நேரு தலைமையில், பள்ளிக்கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி முன்னிலையில் திரைப்பட நடிகர் பிரபு துவக்கி வைத்தார்.

இக்கண்காட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் சிறு வயது புகைப்படங்கள் முதல் தற்போதைய பிரத்யேக புகைப்படங்கள் வரை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை முன்னிட்டு நாள்தோறும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

இக்கண்காட்சி நடிகர் சிவகார்த்திகேயன் திருச்சி வந்திருந்தார். கண்காட்சியை நேரில் கண்டு களித்த பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அதில்,''மிகப்பெரிய உயரங்களை அடைவதற்கு பல வலிகளையும், தியாகங்களையும் தாண்டி வர வேண்டும் என்பதை இந்த புகைப்பட கண்காட்சி உணர்த்துகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் மிகப்பெரிய ஆளுமையின் (கலைஞரின்)  மகனாக இருந்தாலும் நிறைய விஷயங்களை தாண்டி, சாதனைகளைப் புரிந்து முதல்வராக வந்துள்ளார்'' என முதல்வருக்கு புகழாரம் சூட்டினார். 

தொடர்ந்து புகைப்பட கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள ஸ்டாலினின் கும்பிட்டவாறே உள்ள குட்டிக் குழந்தை புகைப்படம் தன்னை வெகுவாக கவர்ந்ததாக குறிப்பிட்டார். பின்னர் மேடையில் பேசிய சிவகார்த்திகேயன் ரசிகர்களின் கரவொலிதான் தன்னை இந்த அளவு உயர்த்தி உள்ளதாகவும் தொடர்ந்து அனைவரும் விரும்பும் திரைப்படங்களை தர தன்னால் ஆன முயற்சிகளை தொடர்வதாக கூறினார்.

இதையும் படிக்க:நேர்மையான அதிகாரிகளை காக்குமா அரசு?