சமந்தாவுக்காக தான் அந்த ட்வீட்டா..? ரசிகர்களின் கேள்விக்கு சித்தார்த் பதில்

சமந்தாவுக்காக தான் அந்த ட்வீட்டா..? ரசிகர்களின் கேள்விக்கு சித்தார்த் பதில்

கோலிவுட் மற்றும் டோலிவுட்டின் முன்ணனி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் நாகசைதன்யாவை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சமந்தா - நாகசைதன்யா ஜோடி சமீபத்தில் பிரிவு அறிவிப்பை வெளியிட்டனர்.

நடிகை சமந்தா தனது கணவரைப் பிரிந்ததாக அறிவித்தவுடன் நடிகர் சித்தார்த் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் ஏமாற்றுபவர்கள் எப்போதும் முன்னேறுவதில்லை என்று என் ஆசிரியர் கற்றுக் கொடுத்திருக்கிறார் என்று பதிவிட்டிருந்தார்.

சித்தார்தின் டுவீட் சமந்தாவை குறிப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. சித்தார்த் மற்றும் சமந்தா இருவரும் காதலித்ததாக சினிமா வட்டாரங்கள் கிசுகிசுத்தனர். 

இந்நிலையில் சித்தார்த் தன் பதிவு குறித்து விளக்கமளித்துள்ளார். ஒவ்வொரு நாளும் நான் என் மனதில் தோன்றுவதை டுவீட் செய்கிறேன், பொதுவாக டுவீட் செய்தால், அது அவர்களுக்கானது என்று மக்கள் நினைத்தால் நான் பொறுப்பல்ல என்று சித்தார்த் தெரிவித்துள்ளார். 

மேலும் தனது டுவீட்களை தேவையற்ற சர்ச்சைகளுக்குள் இழுத்து பெரியதாக ஆக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். என் வாழ்க்கையில் விரும்பாதவர்களை விட நான் என் வாழ்க்கையைப் பற்றி அதிகம் கவலைப்படுகிறேன் என்று சித்தார்த் தெரிவித்துள்ளார்.