விஷாலுக்கு வில்லனாக மாறிய எஸ்.ஜே சூர்யா...புதிய அப்டேட் இதுதான்!

விஷால் நடித்து கொண்டிருக்கும் ’விஷால் 33 ’திரைப்படம் மாநாடு படம் அளவிற்கு வெற்றி பெறும் என்று எஸ்.ஜே சூர்யா தெரிவித்துள்ளார்.

விஷாலுக்கு வில்லனாக மாறிய எஸ்.ஜே சூர்யா...புதிய அப்டேட் இதுதான்!

விஷால் நடித்து கொண்டிருக்கும் ’விஷால் 33 ’திரைப்படம் மாநாடு படம் அளவிற்கு வெற்றி பெறும் என்று எஸ்.ஜே சூர்யா தெரிவித்துள்ளார்.

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்து சிம்புவிற்கு  நல்ல பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது. அந்த படத்தில் விஜய் சூர்யா வில்லனாக நடித்து அசத்தியிருப்பார். எஸ்.ஜே சூர்யா ஹீரோவுக்கு இணையாக  நடித்து மரண மாஸ் காட்டி மக்கள் மத்தியில் நல்ல பெயர் பெற்றுவிட்டார்.

இந்த நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கவிருக்கும் படம் விஷால் 33. இந்தப் படத்தில் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடிக்க இருப்பதாக சில தினங்களுக்கு முன்பு கூறப்பட்டு வந்த நிலையில் அது தற்போது உறுதியாகியுள்ளது.

இது குறித்து எஸ்.ஜே சூர்யா தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், ஓ கடவுளே எல்லா நல்ல கதையும் எங்கிட்டயே அனுப்புறியே. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் சமீபத்திய  கதையை கேட்டு நான் மிகவும் மெய்சிலிர்த்து விட்டேன். என்ன ஒரு அருமையான திரைக்கதை விவரிப்பு.. கண்டிப்பா இது மாநாடு படத்தின் இரண்டாம் பாகம் என்று சொல்லலாம் .அப்படி ஒரு திரைக்கதை. இந்த படமும் எல்லா சாதனையை முறியடிக்கும்.. விஷால் மற்றும் வினோத் ஆகியோர் இருக்க வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.