7 ஆண்டுகளுக்கு பின் கூட மறுமணம்... தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவு குறித்து எஸ்.ஏ சந்திரசேகர்

7 ஆண்டுகளுக்கு பின் கூட மறுமணம்... தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவு குறித்து எஸ்.ஏ சந்திரசேகர்

பிரபல இயக்குநரும், நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ சந்திரசேகர், விவாகரத்து பற்றி வெளியிட்டுள்ள வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

ஒரு ரசிகனின் குரல் என்ற பெயரில், விவாகரத்து பற்றி எஸ்.ஏ சந்திரசேகர் வெளியிட்டுள்ள வீடியோ திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது. அதிலும் இந்த வீடியோவை நன்றாக யோசித்த பிறகே வெளியிட்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா மற்றும் நடிகர் தனுஷ் திருமண முறிவைப் பற்றி பேசுகிறார் என்பதை புரிந்துக் கொள்வது மிகவும் சுலபம்.

இந்த வீடியோவில் திருமணம் என்பது அனுசரித்து வாழ்வது என்றும், விவாகரத்து செய்துக் கொள்பவர்களைப் பற்றி கேள்விப்படும்போது, தானும் மனைவியும் சென்று அவர்களுக்கு புரிய வைக்க முயற்சி செய்வோம் என்று தெரிவித்துள்ளார்

அதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், வீட்டுக்கு வீடு வாசப்படி என்ற பொருளில் பேசிய அவர், தனது வீட்டிற்கு தெரிந்த கணவன் - மனைவி 7 ஆண்டுகள் பிரிந்து அதன்பின்னர் மனம் மாறி மறுமணம் செய்துகொண்டனர்.

ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் பிரிவு குறித்து மிகுந்த வருத்தத்துடன் ஒரு ரசிகனாக பேசுகிறேன் என வீடியோ வெளியிட்டுள்ளார்.