கையில் சுத்தியலுடன் நயன்தாரா..காதலியை வைத்து காசு பார்க்கும் விக்னேஷ் சிவன்

கையில் சுத்தியலுடன் நயன்தாரா..காதலியை வைத்து காசு பார்க்கும் விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தனக்கென ஒரு பாதையை அமைத்து திரைத்துறையில் ஓடிக்கொண்டிருக்கிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில்  முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து காத்துவாக்குல 2 காதல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

நயன்தாரா தன் காதலன் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் பல தரமான திரைப்படங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் தரமணி படத்தின் மூலம் பிரபலமான வசந்த் ரவி நடித்து வரும் திரைப்படம் ராக்கி.

இந்த படத்திற்கு பிரமோஷன் தரும் விதமாக நயன்தாரா பங்கு பெறும் ஒரு ஸ்பெஷல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒன்றரை நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோ திரில்லராக உள்ளது.

அதில் நயன்தாரா ரத்தக் களரியாக கையில் சுத்தியல் உடன் இருக்கிறார். அப்போது காலம் ஒரு துரோகி, படுபாவி என்று நீளமான வசனத்தையும் பேசுகிறார். இந்த நயன்தாராவின் அந்த வீடியோ, அவர் பேசும் வசனம் அனைத்தும் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும், சுவாரஸ்யத்தையும் அதிகரித்துள்ளது. விளம்பரத்திற்காக நயன்தாராவை வைத்து காசு பார்க்கும்  விக்னேஷ்  சிவனின் இந்த ப்ரோமோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.