சிம்பு, விஷாலை தொடர்ந்து தனுஷ் உள்பட 14 நடிகர்கள் மீது நடவடிக்கை? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி?

சிம்பு, விஷாலை தொடர்ந்து தனுஷ் உள்பட 14 நடிகர்கள் மீது நடவடிக்கை? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி?

தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஏற்கனவே 5 நடிகர்களுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் தனுஷ் உள்ளிட்ட 14 நடிகர்களுக்கு ரெட் கார்டு கொடுக்க முடிவெடுத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

சமீபத்தில் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு சென்னையில் நடைபெற்றது. அந்த குழுவில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக, தயாரிப்பாளர்களிடம் சம்பளம் பெற்றுக்கொண்டு கால்ஷீட் தராமல் இழுத்தடிக்கும் நடிகர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு ரெட் கார்டு கொடுக்க முடிவெடுத்தது. அதன்படி, தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடிகர்கள் சிம்பு, அதர்வா, எஸ்.ஜே. சூர்யா, யோகி பாபு, விஷால்  ஆகிய 5 பேருக்கும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டது.

இதையும் படிக்க : ”அடுத்த 25 ஆண்டுகளில் சனாதனத்தை உலகம் ஏற்கும்" நம்பிக்கை தெரிவித்த ஆளுநர்!

இதனைத்தொடர்ந்து தற்போது, மேலும் நடிகை தனுஷ், நடிகைகள் அமலாபால், ராய் லட்சுமி உள்ளிட்ட 14 பேருக்கு ரெட் கார்டு கொடுக்க தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது. தொடர்ந்து, சம்மந்தப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு தகுந்த பதிலளிக்க வேண்டுமென்று சம்மந்தப்பட்ட நடிகர்களுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், நடிகர் தனுஷ் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவன தயாரிப்பில் படம் நடிக்க இருந்த நிலையில், தற்போது அந்த படம் 4 வருடங்களுக்கு மேலாக கிடப்பில் இருப்பதால் அவர் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.