ஐஸ்வர்யாரஜினிகாந்த் மீண்டும் மருத்துவமனையில் திடீர் அனுமதி! கவலையில் ரசிகர்கள்!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா மருத்துவமனையில் திடீரென மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஐஸ்வர்யாரஜினிகாந்த் மீண்டும்  மருத்துவமனையில் திடீர் அனுமதி! கவலையில் ரசிகர்கள்!!

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவுக்கு கடந்த பிப்ரவரி மாதம்  தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த தகவலை ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்று பதிவிட்டார்.  தொடர்ந்து  அவர், மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெறுவது போன்ற புகைப்படம் ஒன்றையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். இது குறித்து அறிந்ததும், குணமடைந்து விரைவில் திரும்ப வேண்டும். கவனமுடன் இருங்கள் என அவருடைய ரசிகர்கள் கமெண்ட்ஸில் பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில், ஐஸ்வர்யா மருத்துவமனையில் திடீரென மீண்டும்  அனுமதிக்கப்பட்டு உள்ளார்.  இதுபற்றி அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள செய்தியில்,  காய்ச்சல் மற்றும் தலைச்சுற்றல் இருப்பதால் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டு உள்ளேன். ஆனால், உங்களுக்கு ஊக்கமளிக்க கூடிய வகையில், உங்களுடன் நேரம் செலவிட கூடிய மருத்துவர்களை நீங்கள் சந்திக்கும்போது, இந்த காய்ச்சலெல்லாம் மோசமென இருக்காது. என்னவொரு தொடக்கம் உங்களை சந்திப்பதில்! மகளிர் தினத்திற்கான கொண்டாட்டம் தொடங்குகிறது மருத்துவர் பிரீத்திகாசாரி அவர்களே! என அதில், தெரிவித்து உள்ளார்.

அதனுடன், தனக்கு சேவை செய்யும் மருத்துவருடன் புன்சிரிப்புடன் இருக்க கூடிய புகைப்படங்களையும் அவர் பகிர்ந்து உள்ளார்.  இந்த போஸ்ட்டை பார்த்த  அவரது ரசிகர்கள் பலரும், நீங்கள் குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும் என தங்களின் வலைதள பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.