போதை பொருள் தொடர்பான வழக்கு.. ரகுல் ப்ரீத் சிங், ராணாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்.!!!

போதை பொருள், கருப்பு பணத்தை வெள்ளையாக்கியது தொடர்பாக பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங், ராணா டகுபதி உள்பட 12க்கு மேற்பட்ட பிரபலங்களுக்கு அமலாக்க இயக்குநரகம் சம்மன் அனுப்பியுள்ளது.

போதை பொருள் தொடர்பான வழக்கு.. ரகுல் ப்ரீத் சிங், ராணாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்.!!!

கடந்த 2017ல் தெலுங்கானா கலால் மற்றும் மதுவிலக்கு துறை மாநிலம் முழுக்க பல்வேறு இடங்களில் நடத்திய அதிரடி சோதனையில் 30 லட்சம் ரூபாய் மதிப்பு கொண்ட போதை பொருட்களை பறிமுதல் செய்தது.

இந்த சோதனை முடிவில் மொத்தம் 12 வழக்குகள் பதியப்பட்டது. அதன்பின் 11 வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் தெலுங்கானா கலால் மற்றும் மதுவிலக்கு துறை மூலம் மொத்தம் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில் பல கோடி பணம் கைமாறி இருக்கலாம் என்பதால் அமலாக்கத்துறை இதில் தனியாக விசாரணை தொடங்கியுள்ளது.  

போதை பொருள் மற்றும் கருப்பு பணத்தை வெள்ளையாக்கியது தொடர்பான வழக்கு விசாரணையில் பாகுபலி நடிகர் ராணா, நடிகை ரகுல் பிரீத்தி சிங் உள்ளிட்ட 12 தெலுங்கு சினிமா பிரபலங்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.