பாலியல் புகாரில் மலையாள நடிகருக்கு முன்ஜாமீன் - துபாயில் பதுங்கியிருந்த விஜய் பாபு கொச்சி வருகை!!

பாலியல் புகாருக்கு உள்ளாகியுள்ள மலையாள நடிகரும் தயாரிப்பாளருமான விஜய் பாபு கேரள மாநிலம் கொச்சி வந்தடைந்தார்.

பாலியல் புகாரில் மலையாள நடிகருக்கு முன்ஜாமீன் - துபாயில் பதுங்கியிருந்த விஜய் பாபு கொச்சி வருகை!!

அண்மையில் மலையாள திரைப்பட நடிகை ஒருவர், நடிகரும், தாயாரிப்பாளருமான விஜய் பாபு மீது கொச்சி காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், விஜய் பாபு தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியிருந்தார். இதுபற்றி போலீஸார் விசாரிக்கத் தொடங்கியதும், விஜய் பாபு துபாய்க்குத் தப்பியோடினார்.

இந்த நிலையில் துபாயில் தலைமறைவாக இருந்த படியே கேரள உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் அவருக்கு நேற்று முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து துபாயில் பதுங்கியிருந்த விஜய் பாபு இன்று கொச்சிக்கு விமானம் மூலம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீதித்துறையின் மீது தனது அதீத நம்பிக்கை உள்ளதாகவும், போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப் போவதாகவும், உண்மை ஒரு நாள் வெளிவரும் எனவும் கூறினார்.