விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த பாப் பாடகி இப்போ உலக பணக்காரர்…  

பாப் பாடகி ரிஹானா, பணக்கார பெண் இசைக்கலைஞர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த பாப் பாடகி இப்போ உலக பணக்காரர்…   

பாப் பாடகி ரிஹானா, பணக்கார பெண் இசைக்கலைஞர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு பாப் உலகின் இளவரசி மற்றும் பிரபல ஹாலிவுட் நட்சத்திரமுமான ரிஹானா ஆதரவு தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வரும் பாடகி ரிஹானா பாப் இசை உலகில் மிகவும் பிரபலமானவராக உள்ளார். 32 வயதான ரிஹானா இசைக் கலைஞர், இசையமைப்பாளர், நடிகை, ஆடை அலங்கார அமைப்பாளர், தொழிலதிபர் என பன்முகத்தன்மை கொண்டவர். 2005ஆம் ஆண்டில் டெஃப் ஜாம் உடன் கையெழுத்திட்ட பிறகு, விரைவில் தனது முதல் இரண்டு ஸ்டுடியோ ஆல்பங்களை வெளியிட்டதன் மூலம் சர்வதேச அங்கீகாரம் பெற்றவர் ரிஹானா.

இந்தநிலையில் பாப் பாடகி ரிஹானா-வின் சொத்து மதிப்பு 1.7 பில்லியன் டாலர்கள் என பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. இதன் மூலம் பிரபஞ்சத்தின் பணக்கார பெண் இசைக்கலைஞர் என்ற பெருமையை ரிஹானா பெற்றுள்ளதாக கூறப்படுகிறது