பொன்னியின் செல்வன் கண்காட்சி..! திரளானோா் பங்கேற்பு...!!

பொன்னியின் செல்வன் கண்காட்சி..! திரளானோா் பங்கேற்பு...!!

கோவையில் நடந்த பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம்  திரைப்பட உபகரணங்கள் கண்காட்சியில் திரளான பொதுமக்கள் பங்கேற்று உள்ளனர்.

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் படத்தில் இடம்பெற்ற போர்கால உபகரணங்களின் கண்காட்சி
கோவை சரவணம்பட்டி புரோஜோன் மாலில் நடைபெற்றது. இதில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் திரைப்படத்தில் நடித்த பிரபல நடிகர்கள் பயன்படுத்திய ராஜ சிம்மாசனம், மகுடம், கேடயம் மற்றும் ஈட்டி போன்ற போர்கால உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.        

இது குறித்து புரோ ஜோன் மாலின் தலைமை மேலாளர் கூறும்போது "இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ள அனைத்து பொருட்களும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் திரைப்படத்தில் இடம் பெற்ற போர்க்கால பொருட்கள் ஆகும். புரோ ஜோன் மால் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அனைத்து விதத்திலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பல கண்காட்சிகளை நடத்தி வருகிறது. இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ள அனைத்து பொருட்களும் பிரபல திரைப்பட கலை இயக்குனர்  தோட்டா தரணி அவர்களின் கைவண்ணத்தில் உருவானவை" என்று தெரிவித்தார்.

மேலும், "திரைப்படத்தில் மட்டுமே பார்த்து ரசித்த போர் கால பொருட்களை கோவை வாடிக்கையாளர்கள் நேரில் கண்டு ரசிக்க ஒரு வாய்ப்பை  புரோஜோன் மால் ஏற்படுத்திக் தந்துள்ளது. இந்த கண்காட்சியை காலை 10 மணி முதல் நள்ளிரவு வரை வாடிக்கையாளர்கள் இலவசமாக கண்டு செல்பி எடுத்துக் கொள்ளலாம்" என தெரிவித்தார்.