என் பேராசை நிறைவேறுமா? கவிஞர் வைரமுத்து ட்வீட்...

பீட்சா பர்கர் சாப்பிடுவோருக்கு தேனும் தினைமாவும் தின்னத் தர வேண்டும் என் பேராசை நிறைவேறுமா என  கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

என் பேராசை நிறைவேறுமா? கவிஞர் வைரமுத்து ட்வீட்...

கவிஞர் வைரமுத்து நாட்டுப்பற்று காரணமாக இனிமேல் சாப்பிடுவோருக்கு தேனும் தினைமாவும் தின்னத் தர வேண்டும் என் பேராசை நிறைவேறுமா என்று ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட ட்வீட்டில், ”நாட்படு தேறல் விசையுறு பந்தினைப்போல் என்னை வினைப்படச் செய்கிறது ” என தொடங்கும் வரிகளை பதிவிட்டுள்ளார்.

அதற்கு  உங்கள் சிற்றாசை கண்டிப்பாக நிறைவேறும் என பலர் ட்வீட் போட்டுள்ளனர். அதில் ஒருவர் இது பேராசையல்ல கவி மகானே ”நீங்கள் தமிழ்த் தவம் செய்கிறீர்கள்” என்று கூறியுள்ளார்.  

அது போல் இன்னொருவரும்  ஆயிரம் தான் பீசா பர்கர் சாப்பிட்டாலும், தேனும் தினை மாவும் என்றும் ஒரு அலாதிச் சுவை என்பதை அறிவோம். இரண்டாம் பருவத்து தேறலின் சொற்ச் சுவை, இசைச் சுவை இவையனைத்தையும் ஒன்றிணைத்து உண்ண காத்திருக்கிறோம் ஐயா என்றார். 

இதனையடுத்து , கவிஞர்  வைரமுத்து கிறிஸ்துமஸ் வாழ்த்துகளையும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், ”ஏசுநாதர் தோன்றியநாள் பேரன்பின் பிறந்தநாள்” தியாகத்தின் திருநாள் அன்பு செலுத்துங்கள்; செலுத்தப்படுவீர்கள் முட்காடு எங்கிலும் பூக்காடு பூக்கட்டும் உலகக் கிறித்துவ சமூகத்துக்குக் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் என தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.