படத்தில் யாரையும் துன்புறுத்துவது போல தாழ்த்தி பேசக்கூடாது: ஜெய் பீம் விவகாரத்தில் நடிகர் சந்தானம் கருத்து...

எந்த படமாக இருந்தாலும், உயர்த்தி பேசலாம் ஆனால், யாரையும் துன்புறுத்துவது போல தாழ்த்தி பேசக்கூடாது என சந்தானம் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.

படத்தில் யாரையும் துன்புறுத்துவது போல தாழ்த்தி பேசக்கூடாது: ஜெய் பீம் விவகாரத்தில் நடிகர் சந்தானம் கருத்து...

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த சந்தானம், அதன்பின்னர் ஹீரோவாக நடித்து வருகிறார். இவர் நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் முதல் சமீபத்தில் வெளியான டிக்கிலோனா வரை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் நடிகர் சந்தானம் நடிப்பில் அடுத்ததாக உருவாகியுள்ள படம் தான் சபாபதி. இந்த படத்தில் சந்தானத்துடன் எம்.எஸ்.பாஸ்கர், சாயாஜி ஷிண்டே, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற நவம்பர் 19-ந் தேதி   திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் இந்த படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்பொது நடிகர் சந்தானத்திடம் ஜெய்பீம் பட சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ஜெய்பீம் திரைப் படம் மட்டுமல்ல, எந்த படமாக இருந்தாலும், உயர்த்தி பேசலாம் என்றும் ஆனால், யாரையும் துன்புறுத்துவது போல தாழ்த்தி பேசக்கூடாது என்றும் நடிகர் சந்தானம் கூறினார்.

ஜாதி, மதம் கடந்து திரையரங்கு வருபவர்களுக்கு, அதற்கான விருந்தாக தான் திரைப்படம் இருக்க வேண்டுமே தவிர, இந்த இடத்தில் சாதி குறித்த சர்ச்சைகள் தேவையற்றது என கூறினார்.