104வது பிறந்த நாள் கொண்டாடிய முதியவர்...!! நடிகர் சத்தியராஜ், சிவக்குமார் வாழ்த்து..!!

104வது பிறந்த நாள் கொண்டாடிய முதியவர்...!! நடிகர் சத்தியராஜ், சிவக்குமார் வாழ்த்து..!!

நாமக்கல்லில் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் புடை சூழ கேக் வெட்டி 104வது பிறந்தநாள் கொண்டாடிய முதியவருக்கு நடிகர்கள் சத்தியராஜ், சிவக்குமார் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நாமக்கல் நகரத்தில் திருச்செங்கோடு சாலையில் வேளாளர் ரைஸ் மில் என்ற பெயரில் நெல் அரவை ஆலை நடத்தி வருபவர் பெரியண்ணன். இவர் பிறந்தது 1920-ம் ஆண்டு  முறையாக பள்ளிக்கு செல்லாத இவர் சுதந்திர போராட்ட காலக்கட்டத்தில் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றுள்ளார்.

இவருக்கு திருமணமாகி ராஜலட்சுமி என்ற மனைவியும் இரண்டு மகள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். அவரது மனைவி ராஜலட்சுமி கடந்த சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் இவரது ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் அமெரிக்காவில் குடியுரிமை பெற்று அங்கேயே வாழ்ந்து வருகின்றனர். முதியவரை அவரது இளைய மகள் மற்றும் உறவினர்கள் பராமரித்து வருகின்றனர்.

இந்நிலையில் முதியவர் பெரியண்ணனுக்கு இன்று 103 வயது நிரம்பி 104வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவரது 100வது வயதில்  பிறந்தநாள் அன்று கொரோனா காலக்கட்டம் என்பதால் பெரிதாக விழா எடுக்க முடியாததால் தற்போது 104வது வயதில் முதியவர் பெரியண்ணனுக்கு குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் புடை சூழ இன்று நடைபெற்றது.

அவர் நடத்தி வரும் வேளாளர் ரைஸ் மில்லின் அருகே முதியவர் பெரியண்ணனின் பிறந்தநாள் விழாவிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உறவினர்களுக்கு அவரது குடும்பத்தினர் அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி அங்கு வந்த முதியவர் பெரியண்ணனிடம் உறவினர்கள் ஆசி பெற்றனர். மேலும் 104வது வயதை கொண்டாடும் விதமாக கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், நடிகர் சத்தியராஜ் மற்றும் சிவக்குமார் ஆகியோர் வாழ்த்து வீடியோ அனுப்பி வைத்துள்ளனர். அதேபோல முதியவரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்திற்கு வரமுடியாத பேரன்கள், பேத்திகள் மற்றும் உறவினர்கள் காணொளி கட்சி வழியாக வாழ்த்து மழையை பொழிந்தனர்.