ரோபோ சங்கரின் மேடைப் பேச்சுக்கு எதிர்ப்பு - படக்குழு சார்பில் மன்னிப்பு கோரிய ஜான் விஜய்!

ரோபோ சங்கரின் மேடைப் பேச்சுக்கு எதிர்ப்பு - படக்குழு சார்பில் மன்னிப்பு கோரிய ஜான் விஜய்!

”பாட்னர்” படத்தின் செய்தியாளர் சந்திப்பில் எழுந்த சர்ச்சையால், படக்குழு சார்பில் ஜான் விஜய் மன்னிப்பு கோரினார்.

சற்குணத்தின் உதவி இயக்குநர் மனோஜ், ‘பாட்னர்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.  நடிகர் ஆதி நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா மவுத்வானியும், பாலக் லால்வானி, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

இந்நிலையில் அறிமுக இயக்குனர் மனோஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள Partner படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை வடபழனியில் நடைபெற்றது. அப்போது மேடையில் பேசிய ரோபோ சங்கர், ஹன்சிகா மவுத்வானி ஒரு மெழுகு பொம்மை என்றும், மைதா மாவை உருட்டி சுவற்றில் எரிந்தால் ஒட்டிக்கொள்ளும் அதுபோல தான் என்றும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

தொடர்ந்து, படத்தின் ஒரு காட்சியில் ஹன்சிகா காலை நான் தடவ வேண்டும். நான் எவ்வளவோ போராடி விட்டேன். ஹன்சிகா முடியவே முடியாது என்று விட்டார். கட்டை விரலையாவது தடவிக் கொள்கிறேன் என்றேன், அப்போதும் மறுத்து விட்டார். ஹீரோ ஆதி மட்டும் தான் தொட வேண்டும், மற்றவர்கள் தொட கூடாது என்று ஹன்சிகா கூறிவிட்டார்.  அப்போது தான் நினைத்தேன், ஹீரோ ஹீரோ தான், காமெடியன் ஓரமாகத்தான் இருக்க வேண்டும் என்பது‌, இவ்வாறு ரோபோ சங்கர் மேடையில் பேசினார்.

இதையும் படிக்க : சிம்பு, விஷாலை தொடர்ந்து தனுஷ் உள்பட 14 நடிகர்கள் மீது நடவடிக்கை? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி?

அவரைத்தொடர்ந்து பேசிய நடிகர் ஆதி, பாட்னர் படம் கண்டிப்பாக என்ஜாய் பண்ணலாம். ரொம்ப யோசித்தால், உங்களுக்கான படம் இதில்லை என நினைக்கிறேன் என்று கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் தருணத்தில், ரோபோ சங்கர் போன்று மேடையில் கதாநாயகியை இழிவாக பேசும் நபரை இனி அழைக்காதீர்கள் என்று செய்தியாளர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 

அப்போது பேசிய ஜான் விஜய், ரோபோ சங்கர் சொல்ல வந்ததை சரியாக சொல்லவில்லை என்று நினைக்கிறேன். படக்குழு சார்பாக நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்று ஜான் விஜய் கூறினார். இருப்பினும், மேடைப் பேசிய ரோபோ சங்கரின் பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.