தேசிய திரைப்பட விருதுகள்..! வெல்லப்போவது யார் ?

தேசிய திரைப்பட விருதுகள்..! வெல்லப்போவது யார்  ?

2023- ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள்  நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. 

இந்த நிகழ்ச்சியில் சிறந்த திரைப்படத்திற்கான வரிசையில்,.. தமிழ் மொழியில் நடிகர் சூர்யா நடித்து வெளியாகி சமீபத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்ற திரைப்படமான ’ஜெய்பீம்’ திரைப்படம் , மற்றும்,  நடிகர் ஆர்யா நடித்து வெளியாகி பெரும் வெற்றி பெற்ற  ‘சார்பட்டா பரம்பரை’ தீரைப்படம், அதோடு, நடிகர் தனுஷ் நடித்து அதிகளவில் மக்களிடையே பேசப்பட்ட ’கர்ணன்’ திரைப்படம்  உள்ளிட்டவை தேர்வுப்பட்டியலில் இருக்கின்றன.

 மேலும், சிறந்த துணை நடிகர்களுக்கான தேர்வுப்பட்டியலில்,  சார்பட்டா பரம்பரை படத்திற்காக நடிகர் பசுபதி, மற்றும், கர்ணன் திரைப்படத்திற்காக நடிகர் லால், மற்றும் ஜெய்பீம் படத்திற்காக நடிகர் மணிகண்டன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

அதனைத்தொடர்ந்து, சிறந்த கதாநாயகிக்கான வரிசையில்,  பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறார். 

இதையும் படிக்க   | ஆளுநரை தபால்காரராக சித்தரித்து போஸ்டர்; பொள்ளாச்சியில் பரபரப்பு

இன்னிலையில்,  திரைத்துறையினர் மிகுந்த ஆர்வத்துடனும் நெடிய எதிர்பார்ப்புடனும் இருக்கின்றனர். கடந்த ஆண்டே சிறந்த நடிகருக்கான தேசிய விருதை  நடிகர் சூரியா பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.   எனவே, இந்த ஆண்டும் அவர் பெயர் பட்டியலில் இடம்பெற்றிருப்பது ரசிகர்களிடையே கூடுதல் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறிருக்க, இந்த ஆண்டும், நடிகர் சூரியா பெற்றால், அவரது இரண்டாவது தேசிய விருதாக இது அமையும்.  

அதேபோல அசுரன் மற்றும் ஆடுகளம் படங்களுக்காக  நடிகர் தனுஷ் இரண்டு முறை  சிறந்த நடிகருக்கான தேசிய   விருதைப் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இன்று விருதை பெற்றால் அது அவருக்கு மூன்றாவது தேசிய விருதாகும்.