"சிங்கம், சிறுத்தை, புலி, யானைகள் மிகவும் ஆபத்தானவை; ஆனால். அது ஜூராசிக் பார்க்கில் அல்ல"  வெளியானது சலார் டீசர்!

"சிங்கம், சிறுத்தை, புலி, யானைகள் மிகவும் ஆபத்தானவை; ஆனால். அது ஜூராசிக் பார்க்கில் அல்ல"  வெளியானது சலார் டீசர்!

கேஜிஎப் குழுவினர் மீண்டும் இணையும் படமான சலார் திரைப்படத்தின் டீசர் இன்று காலை வெளியாகியுள்ளது

ஹொம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் பிரசாந்த் நீல் இயக்கிய  திரைப்படம் கேஜிஎப். கன்னட நடிகர் யஷ் நடித்து இரண்டு பாகமாக வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அனைத்திந்திய திரைப்படமாக எடுக்கபட்ட இப்படத்தின் இரண்டு பாகங்களும் மக்களின் வரவேற்பு மட்டுமின்றி மிகப்பெரிய வசூலையும் படைத்து சாதனை படைத்தது.

தற்போது கேஜிஎப் திரைப்படத்தை உருவாக்கிய அதே குழுவினர் நடிகர் பிரபாஸ் உடன் இணைந்து சலார் என்ற அனைத்து இந்திய திரைப்படத்தை தயாரித்து வருகின்றன. இத்திரைப்பம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. பிரசாந்த் நீல் இயக்கும் இத்திரைப்படத்தில் பாகுபலி படத்தில் நடித்த பிரபாஸ், மலையாள நடிகர் பிருத்விராஜ் , நடிகர் கமலஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் , தின்னு ஆனந்த் , ஈஸ்வரி ராவ் , ஜெகபதி பாபு , ஸ்ரீயா ரெட்டி , மற்றும் ராமச்சந்திர ராஜு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி வெளியாக உள்ள இந்த திரைப்படத்தின் முதல் பாகத்தின் டீசர் காட்சிகள் இன்று காலை யூடியூப் இணையதளத்தில் வெளியானது. முழுவதுமாக எளிய ஆங்கிலத்தில் அமைந்த வசனங்களை கொண்ட இந்த டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. "சிங்கம், சிறுத்தை, புலி, யானை போன்ற விலங்குகள் மிகவும் ஆபத்தானவை. ஆனால் அது ஜூராசிக் பார்க்கில் அல்ல" எனும் அர்த்தம் கொண்ட இத்திரைப்பட வசனம் பார்ப்பவர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. அதே நேரத்தில் இந்த டீசர் ஏற்கனவே வெளிவந்த கேஜிஎப் சாயலிலேயே உள்ளதாக விமர்சனங்களையும் பெற்றுள்ளது.

இதையும் படிக்க | தெலங்கானா: சாதி மறுப்பு திருமணம்; நண்பர்கள் வீட்டை அடித்து உடைத்த பெண்ணின் பெற்றோர்!