முதலமைச்சர் மகளாக நடிக்க லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா சம்மதம்...
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா,அடுத்ததாக தெலுங்கில் ரீமேக் ஆகும் லூசிபர் படத்தில் முதலமைச்சர் மகளாக நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து மலையாளத்தில் வெளியான ‘லூசிபர்’ திரைப்படம் மிக பிரம்மாண்ட வெற்றியை கண்டது.அந்த வகையில் இந்தியாவையே மிரள வைத்த இந்த படத்தில் மோகன்லால் அரசியல்வாதியாகவும், அண்டர்கிரவுண்ட் கேங்ஸ்டராகவும் நடித்து தன் கதாபாத்திரத்தை மிளிர செய்தார்.இதைத்தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்கும் பணிகளை பிருத்விராஜ் துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
.இந்நிலையில்,லூசிபர் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்கிறார் பிரபல இயக்குனர் மோகன் ராஜா.இதில் தெலுங்கு திரையுலக மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்க இருக்கிறார். சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட் செலவில் உருவாக உள்ள இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தில் நடிகை நயன்தாராவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடித்திருந்த முதலமைச்சர் மகள் கதாபாத்திரத்திற்கு, நயன்தாராவை தேர்வு செய்த நிலையில், அதற்கான பேச்சுவார்த்தை கடந்த சில மாதங்களாகவே நடந்து வந்தது.இந்நிலையில், தற்போது தான் அவர் நடிப்பதாக சம்மதம் தெரிவித்திருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.