தமிழ் வீரமே வாகை சூடும்.. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுடன் கமல்ஹாசன் உரையாடல்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரர்களுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடிய கமல்ஹாசன் ’தமிழ் வீரமே வாகை சூடும். நாளை உலகமே இவர்கள் புகழ் பாடும்’ என தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் வீரமே வாகை சூடும்.. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுடன் கமல்ஹாசன் உரையாடல்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரர்களுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடிய கமல்ஹாசன் ’தமிழ் வீரமே வாகை சூடும். நாளை உலகமே இவர்கள் புகழ் பாடும்’ என தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் வருகிற 23-ந்தேதி முதல் தொடங்க உள்ள ஒலிம்பிக் திருவிழா வரும் ஆகஸ்ட் 8-ந்தேதி வரை நடைபெற உள்ளது.இந்த போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த 120க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 வீரர்களும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழகத்தை சேர்ந்த வீரர்களுடன் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் காணொலி வாயிலாக கலந்துரையாடி உள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டபோது “டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தமிழகத்திலிருந்து தேர்வான வீரர்களுடன் கலந்துரையாடினேன். தமிழ் வீரமே வாகை சூடும். நாளை உலகமே இவர்கள் புகழ் பாடும்” என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்