ட்விட்டரில் ட்ரெண்டாகும் #JusticeForKoratalaShiva; தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு இடையிலான மோதல்:
சமூக வலைதளங்களில் புதிய சர்ச்சையின் மையமாக இருப்பவர் தெலுங்கு இயக்குனர் கொரடலா சிவா. கொரடலா சிவாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் மெகா ஸ்டார் ரசிகர்கள், என்டிஆர் ரசிகர்கள், மகேஷ் பாபு ரசிகர்கள் மற்றும் பிரபாஸ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
'ஆச்சார்யா' படத்தின் மூலம் கொரடலா சிவாவை இக்கட்டான கட்டத்தில் வைத்ததற்காக மெகாஸ்டார் சிரஞ்சீவி மற்றும் ராம் சரண் ஆகியோரை என்டிஆர் மற்றும் மகேஷ் பாபுவின் ரசிகர்கள் அவதூறு செய்து வர, மெகாஸ்டாரின் ரசிகர்கள் கொரடலா சிவா, கதை மற்றும் திரைக்கதையில் கவனம் செலுத்தாமல் படத்தின் வணிகத்தில் ஈடுபட்டதற்காக அவரை அவதூறு பேசி வருகின்றனர்.
கொரட்டாலா சிவா இயக்கிய 'ஆச்சார்யா' திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சரியான வரவேற்பைப் பெறவில்லை. இந்த படம் விநியோகஸ்தர்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. வினியோகஸ்தர்கள் சிலர் உடனடியாக பணத்தை திருப்பி செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட ஏற்கனவே கொரடலா சிவா பணம் கொடுத்திருந்த நிலையில், ராயலசீமாவின் செடெட் பகுதியின் விநியோகஸ்தர்கள் மற்றும் எக்சிபிட்டர்கள், கடந்த வியாழக்கிழமை கொரடலா சிவாவை சந்தித்து பணத்தைக் கேட்டதாகவும், இந்த விவகாரத்தை ஓரிரு நாட்களில் தீர்த்து வைப்பதாக அவர் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் தான் அவரது பெயர் ட்விட்டரில் ட்ரெண்டிங் டாபிக் ஆனது.
இந்த நிலையில், கொரடலா சிவா, என்டிஆர் நடிக்கும் அடுத்த படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளில் ஈடுபட்டு வருவதால், முன்பை விட மேலும் வலிமையாக எழுந்து மீண்டு வர சொல்லி, அவரது ரசிகர்கள் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.