"வலிமை" அட்ராசிட்டிஸ்..! போலீஸ் கையை டேஸ்ட் பார்த்த ரசிகர்கள்... ஏன் தெரியுமா?

வலிமை திரைப்பட வெளியீட்டை பட்டாசு வெடித்து கொண்டாடியவர்களை கண்டித்த காவல்துறையினரை அஜித் ரசிகர்கள் கையில் கடித்து வைத்த நகைப்பூட்டும் சம்பவம் திருச்சியில் அரங்கேறியுள்ளது.

"வலிமை" அட்ராசிட்டிஸ்..! போலீஸ் கையை டேஸ்ட் பார்த்த ரசிகர்கள்... ஏன் தெரியுமா?

தமிழ் திரையுலகில் தனக்கென்று ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் தல என்று செல்லமாக அழைக்கப்படும் அஜித்குமாரின் வலிமை திரைப்படம் நேற்று மாஸாக திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

நடிகர் அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் ஹியூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ரீலிஸ் தேதி தள்ளி தள்ளி போனதால் அஜித்தின் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து வந்தனர். இந்நிலையில்  ரசிகர்களின் நீண்டநாள் தவத்திற்கு பலனாக  நேற்று பிரம்மாண்டமாக வலிமை திரைப்படம் வெளியானது.

இதனைத்தொடர்ந்து தன்னை தல என அழைக்க வேண்டாம் என அஜித்குமார் கூறினாலும் தல எங்களுக்கு எப்போதும் தல தான் என சொல்லி வெற்றி முழக்கமிட்ட ரசிகர்கள் தியேட்டர் வாசல்களில் பாலாபிஷேகம் செய்து பட்டாசு வெடித்து ஆட்டம் பாட்டம் என கொண்டாட்ட களிப்பில் இருந்தனர்.

இதேபோன்று கொண்டாத்தில் ஈடுபட்ட அஜித்தின் ரசிகர்கள் இருவர் செய்த காரியத்தால் காவல்துறையினர் அவர்களை கைது செய்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை எற்படுத்தியது. ஆன அதன் பின்னணியை விசாரித்த போது தான் நகைப்பூட்டும் சம்பவம் ஒன்று வெளியானது. 

அட என்னன்னு பாக்குறீங்களா...திருச்சி அருகே லால்குடியில் உள்ள அன்பு சினிமா தியேட்டரில் நேற்று வலிமை படத்தை திரையிட்டுள்ளனர். அப்போது இந்த படத்தினை தியேட்டருக்கு காணவந்த அஜித் ரசிகர்கள் தங்களின் உற்சாகத்தை வெளிப்படுத்தும் விதமாக தியேட்டருக்கு முன்புறமுள்ள லால்குடி ரயில்வே மேம்பால அனுகு சாலையில் வெடி வெடித்து கொண்டாடியுள்ளனர். 

இவர்களின் இந்த செயல் பொதுமக்களுக்கு இடையூறலாக இருந்ததால், அங்கிருந்த போலீசார் வெடி வெடித்து கொண்டாடிய இளைஞர்களை எச்சரித்து வந்துள்ளனர். ஆனாலும் அதை பொருட்படுத்தாத இளைஞர்கள் மீண்டும் வெடி வெடித்து ஆரவாரம் செய்து போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த இளைஞர்களை கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த இரு இளைஞர்களும் காவலர் சுரேஷ் என்பவரின் வலது கையினை கடித்து காயப்படுத்தியுள்ளனர். காயமடைந்த போலீசார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் போலீசார் சுரேஷை கடித்த அஜித் ரசிகர்கள் அருண் குமார் மற்றும் கோபிநாத் ஆகிய இருவரையும் லால்குடி போலீசார் கைது செய்து  சிறையில் அடைத்தனர்.

இப்படி ஒரு படத்தின் கொண்டாட்டத்திற்காக போக்குவரத்திற்கு இடையூறலாக இருந்த அஜித் ரசிகர்களை கண்டித்த போலீசாரை அவர்கள் ஒன்றிணைந்து கையில் கடித்த சம்பவம் ஒரு புறம் சிரிப்பை ஏற்படுத்தினாலும், மறுபுறம் ரசிகர்கள் என்று சொல்லிக்கொண்டு இவர்கள் செய்யும் செயல் கோபத்தையும் ஏற்படுத்தி வருகிறது.