நீங்க ரெண்டு பேரும் போகலனா நான் போய் பார்க்கிறேன் - கமல் குறித்து தாடி பாலாஜி சொன்னது என்ன?
பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட தாடி பாலாஜி, நிகழ்ச்சி முடிந்து வெளியேவந்ததும் கமல்ஹாசன் தன்னிடம் ஒரு விஷியம் சொன்னதாக தெரிவித்துள்ளார்.
சென்னையை சேர்ந்தவர் தாடி பாலாஜி. இவர் டெலீவிஸின் ஷோக்களிலும், சீரியல்களில் நடித்துள்ளார். சில படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு நித்திய என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், பாலாஜி-க்கும் நித்தியா-வுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரித்துள்ளனர். இருவரையும் சேர்ந்து வைக்க நண்பர்கள் முயற்சித்து வந்தனர்.
இந்த நிலையில் மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தில் தாடி பாலாஜி புகார் கொடுத்தார். அந்த புகாரில் தனது மகளை நித்திய சமூக வலைதளங்களில் நடனமாட வைத்துள்ளார். அந்த விடியோவுக்கு வரும் கமெண்டை ஒரு தந்தையாக தன்னால் பார்கள் முடியவில்லை. எனவே எனது மகளை மீட்டுத் தருமாறு கேட்டுக் கொண்டார். இந்த நிலையில் நித்யாவிடம் கேட்டபோது, எல்லாவற்றையும் நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்வேன் என்றார்.
பிக்பாஸ் சீசன் 2ல் இருவரும் ஒன்றாக பயணம் செய்தனர். பிக்பாஸில் கமல் எவ்வளவு அடைவஸ் கொடுத்தாரே என கேட்ட போது.. நித்யா கூறியது கமல் பற்றி பேசவேண்டாம், என் வாழ்க்கையில் அவரை போல் வொர்ஸ்ட் கேரக்டரை பார்த்ததில்லை. மேலும் அவரை குறித்து என்னிடம் பேசுவதற்கு நிறைய கன்டென்ட் உள்ளது என்றார்.
நித்தியவின் பேச்சு பெரும் பரபரப்பி ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தாடி பாலாஜி கூறுகையில், பிக்பாஸ் 2 நிகழ்ச்சியிலிருந்து நான் வந்தவுடன் கமல் சார் என்னை அவரது அலுவலகத்திற்கு அழைத்தார். மகளை போர்டிங் பள்ளியில் சேர்த்து விடுங்கள். உங்கள் இருவருக்கும் எந்த பிரச்சனையும் வராது. நித்யா முடிந்தால் வாராவாரம் போய் பார்க்கட்டும், நீங்களும் போய் பாருங்க. நீங்க ரெண்டு பேரும் போகலனா நான் போய் பார்க்கிறேன் என கமல் ஹாசன் கூறியதாக பாலாஜி கூறினார்.