’விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் சிம்பு ரோலில் நான் நடித்திருக்கவேண்டும், மிஸ் செய்துவிட்டேன் - நடிகர் ஜெய் வருத்தம்!

வெற்றி படமான ’விண்ணைத்தாண்டி வருவாயா’ திடைப்படத்தில் நான்தான் நடித்திருக்கவேண்டும், மிஸ் செய்துவிட்டேன் என்று பேட்டி ஒன்றில் நடிகர் ஜெய் வருத்தத்துடன் கூறியுள்ளார். 

’விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் சிம்பு ரோலில் நான்  நடித்திருக்கவேண்டும், மிஸ் செய்துவிட்டேன் - நடிகர் ஜெய் வருத்தம்!

தமிழ் சினிமாவின் லிட்டில் சூப்பர் ஸ்டாரான நடிகர் சிம்பு, நடிகை த்ரிஷா நடிப்பில், இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா”. இந்த படத்தின் வெற்றி சிம்பு, த்ரிஷா விற்கு மட்டுமின்றி இயக்குனர் கெளதம் மேனனுக்கும் திரையுலக வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. அந்த அளவிற்கு இன்றளவும் இந்த படத்தில் வந்த கார்த்திக் மற்றும் ஜெஸ்ஸி கேரக்டர்கள் ரசிகர்களிடம் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

இப்படி அனைவராலும் பேசப்படும் இப்படத்தை மிஸ் செய்துவிட்டதாக தமிழ் இளம் நடிகர்களில் ஒருவரான நடிகர் ஜெய் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில் ’விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் நடிக்க எனக்கு தான் முதலில் வாய்ப்பு கிடைத்தது என்றும் ஆனால் நான் அதை மிஸ் செய்துவிட்டேன் என்றும் வருத்தத்துடன் கூறியுள்ளார்.

இந்த பேட்டியை கவனித்த ஜெய்-யின் ரசிகர்கள் இவர் மட்டும் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் ஜெய் நடித்திருந்தால் அவருடைய திரையுலக மார்க்கெட் உச்சத்திற்கு சென்று இருக்கும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.