ரசிகர்கள் தல தல என பைத்தியமாக இருக்கும் காரணம் தெரிந்துகொண்டேன்.. ராஜமௌலி ஓபன் டாக்

ரசிகர்கள் தல தல என பைத்தியமாக இருக்கும் காரணம் தெரிந்துகொண்டேன்.. ராஜமௌலி ஓபன் டாக்

கோலிவுட்டில் நட்சத்திர நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் மட்டுமல்லாது, திரையுலகினர்கள் எல்லாருமே ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சமூக வலைத்தளங்களை தெறிக்கவிட்டு வருகிறது. இதற்கிடையில் பாகுபலி இயக்குனர் எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவான திரைப்படம் ஆர்ஆர்ஆர்.

இப்படம் ஜனவரி 7ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இயக்குனர் ராஜமௌலி, ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் மூவரும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். அப்பொழுது இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி அஜித்துடன் தனக்கு ஏற்பட்ட சந்திப்பு குறித்தும் அவரை புகழ்ந்தும் பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது, ஒருமுறை ராமோஜி பிலிம் சிட்டியில் அஜித்தை சந்தித்தேன். அங்கு பெரிய ரெஸ்டாரண்ட் ஒன்றில் அஜித் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தார். என்னை கண்டதும் உடனே எழுந்து வந்து என்னிடம் நலம் விசாரித்தார். பின்பு என்னை அழைத்துச் சென்று அவரது டேபிளில் அமர வைத்தார்.

பின்பு எனது மனைவி உள்ளே வந்தார். உடனே அஜித் எழுந்து சென்று அவரிடம் தன்னை அறிமுகம் செய்துகொண்டு அவரையும் அழைத்து வந்து அமர வைத்தார். 

மேலும் தற்போது அவர் செய்த விஷயம் என்னை பெருமளவில் கவர்ந்துள்ளது. அதாவது கோடிக்கணக்கான ரசிகர்கள் தல தல என பைத்தியமாக இருக்கும் நிலையில், அவர் தல என்பதை நீக்கிவிட்டு அஜித் குமார் அல்லது ஏகே என்று கூப்பிட சொன்னார். உண்மையிலே அவருக்கு ஹாட்ஸ் ஆப் என கூறியுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.