பழங்குடியின மக்களின் உரிமைக்காக போராடும் ’சூர்யா’ 39-வது படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு…!  

சூர்யா நடிக்கும் 39  படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பழங்குடியின மக்களின் உரிமைக்காக போராடும் ’சூர்யா’  39-வது படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு…!   

சூர்யா நடிக்கும் 39  படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

‘கூட்டத்தில் ஒருத்தன்’ படத்தை இயக்கிய டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூர்யா தனது 39-வது படத்தில் நடித்து வருகிறார். சூர்யா இந்தப் படத்தில் பழங்குடியின மக்களின் உரிமைக்காக போராடும் வழக்கறிஞராக நடிக்கிறார். சூர்யாவின் 2D என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தான் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது. இன்று சூர்யா பிறந்தநாளைக் கொண்டாடுவதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சூர்யா 39 படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. படத்திற்கு ஜெய் பீம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பழங்குடியின மக்களும் போஸ்டரில் இடம் பெற்றுள்ளனர். இந்தப் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.