கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த ரசிகர்கள்.. ஏன்டா இப்படி? என கொந்தளித்த சித்தார்த்

கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த ரசிகர்கள்.. ஏன்டா இப்படி? என கொந்தளித்த சித்தார்த்

தமிழ் சினிமாவில் அறிமுகமான சித்தார்த் தற்போது இந்திய சினிமாவே கவனிக்கப்படும் நடிகராக வலம் வருகிறார். சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும்  சித்தார்த், அவ்வபோது சமூகம் சார்ந்த கருத்துக்களை வெளிப்படுத்தி வருவார்.

இதனால் அது சம்பந்தப்பட்ட ரசிகர்களிடம் அவ்வப்போது சமூக வலைதளங்களில் சண்டை கூட வரும். சமூக கருத்துகள் சொல்கிறேன் என பல சிக்கல்களில் மாட்டி சிக்கி தவித்தார். அதன் பிறகு வேறு எந்த ஒரு விஷயத்திற்கும் குரல் கொடுக்காமல் அமைதியாக இருந்து வருகிறார்.

அவரே சும்மா இருந்தாலும் இந்த ரசிகர்கள் அவரை சும்மா இருக்க விடமாட்டேன்கிறார்கள், சித்தார்த்துக்கு திடீரென கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். 

அதற்கு காரணம் கடந்த ஹிந்தி பிக் பாஸ் சீசன்13 கலந்துகொண்டு ரசிகர்களிடம் ஏகபோக வரவேற்பை பெற்ற சித்தார்த் சுக்லா என்பவர் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டார்.

அவருடைய பெயரும் சித்தார்த் பேரும் ஒரே மாதிரி இருந்ததால் நம்ம சித்தார்த் தான் இறந்துவிட்டார் என ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து விட்டார்கள். அதை சித்தார்த் தன்னுடைய சமூக வலைதளத்தில் பகிர்ந்து, இலக்கு வெறுப்பு மற்றும் தொல்லை. நாம் எதற்கு குறைக்கப்பட்டுள்ளோம்? என கேள்வி கேட்டுள்ளார்.