இவளைப் பார்த்த இன்பம் போதும்... பாவனாவை கொண்டாடிய ரசிகர்கள்.!!

நடிகை பாவனா வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இவளைப் பார்த்த இன்பம் போதும்... பாவனாவை கொண்டாடிய ரசிகர்கள்.!!

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளில் பிரபல நடிகையான பாவனா, கடந்த 20 ஆண்டுகளில் 80 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆனார் பாவனா. அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. 


பாவனா கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மற்ற மொழி படங்களிலும் நடித்துள்ள பாவனா வித்தியாசமான கதாபாத்திரத்தை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு இவர் பெரிய அளவில் படங்கள் நடிக்கவில்லை.

சினிமாவில் விலகியிருந்த பாவனா தற்போது மீண்டும் படங்களில் நடிக்க முடிவு எடுத்துள்ளார். அவ்வபோது சமூகவலைத்தளத்தில் ஃபோட்டோ ஷூட்களை பகிர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.