பிரபல நடிகர் அக்ஷய் குமார் தாயார் மரணம்.. திரையுலகினர் அஞ்சலி..!!

பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரின் தாயார் அருணா பாட்டியா உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார்.

பிரபல நடிகர் அக்ஷய் குமார் தாயார் மரணம்.. திரையுலகினர் அஞ்சலி..!!

'சிண்ட்ரெல்லா' என்னும் த்ரில்லர் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக லண்டன் சென்ற அக்‌ஷய் குமாருக்கு அவரது அம்மா இறந்த தகவல் கிடைத்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அக்‌ஷய், ஷூட்டிங்கை பாதியில் நிறுத்துவிட்டு இந்தியா விரைந்துளார்.

வரும் வழியில் அக்‌ஷ்ய் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாக ஒரு பதிவிட்டுள்ளார். அதில். "அம்மாதான் எனக்கு அனைத்துமாக இருந்தார்கள். எனக்கு தீராத வலியைக் கொடுத்துட்டு, இன்றைக்கு காலையில் அம்மா, அப்பாவோட உலகத்துக்கு நிம்மதியா போய் சேர்ந்துட்டாங்க. எனது தாய் நலம் பெற பிரார்த்தித்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி.

இந்நிலையில், அக்‌ஷய் குமாருக்கு அவருடைய ரசிகர்கள் மற்றும் திரையுல நண்பர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக ஆறுதல் கூறி வருகின்றனர்.