பிரபல தொலைக்காட்சி நடிகை தற்கொலை முயற்சி... பரபரப்பு!!

தெலுங்கு தொலைக்காட்சி நடிகை மைதிலி தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல தொலைக்காட்சி நடிகை தற்கொலை முயற்சி... பரபரப்பு!!

கட்டா மைதிலி ஒரு தெலுங்கு தொலைக்காட்சி நடிகை. இந்நிலையில், இவர் ஒரே நேரத்தில் 8 பாட்டில்கள் ரம் வகையை சேர்ந்த மதுபானம் மற்றும் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

மைதிலி தற்கொலைக்கு முயன்றதாக போலீசாருக்கு தகவல் சென்றுள்ளது. இதைத்தொடர்ந்து போலீசார், மைதிலி-யின் மொபைல் போனை ட்ரேஸ் செய்து அவரது வீட்டிற்கு விரைந்தனர். அங்கு நடிகை மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மைதிலி தனது கணவர் ஸ்ரீதர் ரெட்டி மற்றும் நான்கு பேருக்கு எதிராக துன்புறுத்தல் புகார் அளித்து உள்ளார்.

இந்த வழக்கில் முதற்கட்ட விசாரணை நிறைவடைந்துள்ளது. இதேபோல் சூரியப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மோதி காவல் நிலையத்தில் தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கட்டா மைதிலி புகார் அளித்துள்ளார். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகை மைதிலி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திரையுலகினரிடையே பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.