ராஜ்குந்த்ராவுடன் விரைவில் விவாகரத்து? ஷில்பா ஷெட்டி எடுக்கபோகும் அதிரடி முடிவு...

நடிகை ஷில்பா ஷெட்டி அவரது கணவர் ராஜ்குந்த்ராவுடனான திருமண வாழ்க்கையை முறித்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

ராஜ்குந்த்ராவுடன் விரைவில் விவாகரத்து? ஷில்பா ஷெட்டி எடுக்கபோகும் அதிரடி முடிவு...

கடந்த ஜூலை மாதம், ஆபாசப் படங்களைத் தயாரித்து, விநியோகித்த வழக்கில் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார் ராஜ் குந்த்ரா. இதன் மூலம் கோடி கணக்கில் பணம் சம்பதித்து இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ராஜ் குந்த்ராவுக்கு எதிராக ஆதாரங்கள் வலுவாக இருப்பதால் அவருக்கு தண்டனை கிடைப்பது உறுதி என்று கூறப்பட்டு வருகிறது.

இதற்கிடையே ராஜ்குந்த்ராவை விட்டு பிரிய ஷில்பா ஷெட்டி பிரியவிருப்பதாக, தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ராஜ் குந்த்ராவை பிரிந்து, அவர் சம்பந்தப்பட்ட எந்த பிரச்சனைகளும் இல்லாமல், புது வாழ்க்கையை தொடங்க நடிகை ஷில்பா ஷெட்டி முடிவு எடுத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்தத் தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.