முதலில் பிரியா பவானி சங்கரை ரிஜக்ட் செய்தேன்; ‘யானை’ படவிழாவில் உண்மையை உடைத்த இயக்குனர் ஹரி!

அருண் விஜய்யின் ‘யானை’ படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் ஹரி நடிகை பிரியா பவானி சங்கரை முதலில் ரிஜக்ட் செய்ததாக கூறியுள்ளார்.

முதலில் பிரியா பவானி சங்கரை ரிஜக்ட் செய்தேன்; ‘யானை’ படவிழாவில் உண்மையை உடைத்த இயக்குனர் ஹரி!

நடிகை பிரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருகிறார். அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வரும் பிரியா பவானி சங்கர் தற்போது அருண் விஜய்க்கு ஜோடியாக யானை படத்தில் நடித்து முடித்துள்ளார்.

ஆக்ஷன் காதல் சென்டிமென்ட் என தன்னுடைய ஒவ்வொரு படங்களிலும் பட்டையை கிளப்பிகொண்டிருக்கும் இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘யானை’. இந்த படம் மூலம் இயக்குனர் ஹரி முதன் முதலாக நடிகர் அருண் விஜய்யுடன் கூட்டணி அமைத்துள்ளார். இந்த படத்தில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர், ராதிகா, யோகிபாபு, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படி ஹரி இயக்கத்தில் அதிரடியான ஆக்சன் பின்னணியில் குடும்ப கதைக்களத்தில் உருவாக்கியுள்ள ’யானை’ திரைப்படத்தின் படவிழா சமீபத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. அப்போது விழாவில் பேசிய இயக்குனர் ஹரி, யானை படத்திற்கு கதாநாயகி தேர்வு நடைப்பெற்றுக்கொண்டிருந்த போது பிரியா பவானி சங்கர் பெயர் இடம்பெற்றது. ஆனால் நான் அவரை ரிஜக்ட் செய்தேன். காரணம் ‘மாபியா’ திரைப்படத்தில் அருண் விஜய்யுடன் இணைந்து நடித்தார் அதற்குள் இந்த படத்திலும் நடிக்க வேண்டாம் என கூறினேன். 

இந்நிலையில் ஒரு திருமண விழாவில் பிரியா பவானி சங்கரை நேரில் சந்திக்க நேர்ந்தது. அந்நிகழ்ச்சி முழுவதும் அவரை விட்டு என் கண் திரும்பவில்லை. அப்போதே முடிவு செய்துவிட்டேன் ‘ மாபியா’ எல்லாம் தூக்கி அந்த பக்கம் போட்டுவிட்டு ‘யானை’ படத்திற்கு இவரையே ஹீரோயினாக கமிட் செய்துவிடலாம் என்று முடிவு செய்தேன் இவ்வாறு அவர் பேசியுள்ளார்.