கமல்ஹாசனின் விக்ரம் படப்பிடிப்பு நடத்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அனுமதி மறுப்பு...

சென்னை காவலர் அருங்காட்சியகத்தில் நடிகர் கமலஹாசனின் படப்பிடிப்பு நடத்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அனுமதி மறுத்து உத்தரவிட்டுள்ளார்.

கமல்ஹாசனின் விக்ரம்  படப்பிடிப்பு நடத்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அனுமதி மறுப்பு...

சென்னை காவலர் அருங்காட்சியகத்தில் நடிகர் கமலஹாசனின் படப்பிடிப்பு நடத்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அனுமதி மறுத்து உத்தரவிட்டுள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமலஹாசன், விஜய் சேதுபதி நடிப்பில் விக்ரம் 2 படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள காவலர் அருங்காட்சியகத்தில் படிப்பிடிப்பு நடத்த அனுமதி கோரி, ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் காவல் ஆணையரிடம் கடிதம்  வழங்கப்பட்ட நிலையில்  144 தடை உத்தரவு அமலில் இருப்பதை காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.