மாதவனின் "ராக்கெட்ரி நம்பி விளைவு" திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

மாதவன் நடிக்கும் "ராக்கெட்ரி நம்பி விளைவு" திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்ட்டுள்ளது.

மாதவனின் "ராக்கெட்ரி நம்பி விளைவு" திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இஸ்ரோ அறிவியல் விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களில் வாழக்கை திரைப்படமாக உருவாகியுள்ள படம் "ராக்கெட்ரி நம்பி விளைவு". இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தில் சிம்ரன், கபூர், ரவி, ராகவேந்திரா, மிஷா கோஷல், குல்ஷன் குரோவர், கார்த்திக் குமார் மற்றும் தினேஷ் பிரபாகர் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்..

இஸ்ரோவில் அறிவியல் விஞ்ஞானியாக பணி புரிந்தவர் கேரளாவை சேர்ந்த நம்பி நாராயணன். கடந்த  1994ஆம் ஆண்டு வேறு நாட்டிற்கு தகவல் கொடுத்ததாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது... இதை தொடர்ந்து இவர் சிறையில் அடைக்கப்பட்டார்..

பின்னர், 1998 ஆம் ஆண்டு இவை எந்த குற்றமும் செய்ய விலை என தீர்ப்பளித்து நீதிமன்றம் விடுதலை செய்தது... இது குறித்து நச்ட்ட ஈடாக அவருக்கு 50 லட்சம் பணம் வழங்கப்பட்டது... இந்த சம்பவத்தை நம்பி நாராயணன் புத்தகமாக எழுதியுள்ளார். இக்கதையை படமாக நம்பி நாராயணன் ஒப்புக்கொண்டதால் மாதவன் இக்கதையை படமாக்க முடிவு செய்து நடித்தும் வருகிறார் .

இந்நிலையில், "ராக்கெட்ரி நம்பி விளைவு" படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது, அதன் படி, ஜூலை மாதம் 1ஆம் தேதி 6 மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.. இப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது...