அழகாக இருந்ததால் உங்களிடம் பேச தயங்கினோம்...நடிகரின் காமெடி பேச்சு..

காமெடியாக பேசி நழுவிய ஆர்.ஆர்.ஆர் பட நாயகன்..

அழகாக இருந்ததால் உங்களிடம் பேச தயங்கினோம்...நடிகரின் காமெடி பேச்சு..

தெலுங்கில் பிரபல இயக்குனராக வலம் வருபவர்  ராஜமெளலி.  இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத் திறமைக்கொண்ட  ராஜமௌலி பாகுபலி படம் மூலம் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தார்.

தற்போது இவர் இயக்கத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் ’ரத்தம் ரணம் ரௌத்திரம்’ படம் கிட்டத்தட்ட 400 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. 

சுதந்திர போராட்ட கால கட்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும் நெருங்கிய நண்பர்கள் வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் நாயகியாக பாலிவுட் நடிகை ஆலியா பட் நடித்துள்ளார். மேலும் முக்கியமான வேடத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில், சமீபத்தில் வெளியான ’நாட்டு நாட்டு’பாடல் வரிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தில் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து தற்போது புரமோஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது.  

இந்நிலையில், படத்தை பிரபலப்படுத்தும் நோக்கில் படக்குழுவினர் ஒவ்வொரு மாநிலத்திற்காக சென்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து வருகின்றனர்.

அப்போது பேசிய நடிகை ஆலியா பட், இப்படத்தின் நாயகர்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும்  என்னிடம் சரியாக கூட பேசுவதில்லை. இருவரும் சேர்ந்துவிட்டால் அருகில் இருப்பவர்களையே மறந்துவிடுவார்கள் என்றார். 

இதற்கு பதில் கூறிய ராம்சரண், நீங்கள் மிகவும் அழகாக இருந்ததால் உங்களிடம் பேச தயங்கினோம் என காமெடியாக பேசி நழுவிக்கொண்டார்.