அண்ணானு சொல்லி கழட்டிவிட்ட ஷிவானி.. சோகத்தில் பாலா 

பாலாஜி முருகதாஸுக்கு ரக்ஷா பந்தன் வாழ்த்து கூறி நடிகை ஷிவானி நாராயணன் ஷேர் செய்துள்ள புகைப்படத்தால் இணையத்தளம் அனலாகி வருகிறது.

அண்ணானு சொல்லி கழட்டிவிட்ட ஷிவானி.. சோகத்தில் பாலா 

சீரியலில் மூலம் எண்டிரி கொடுத்த ஷிவானி நாராயணன்,  மாடலிங், விளம்பர படங்கள் என பிஸியாக இருந்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், லாக் டவுனின் போது 4 மணிக்கு தனது போட்டோவை போஸ்ட் செய்து இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்தார்.

இன்ஸ்டாகிராமில் மட்டும் 30 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ள ஷிவானி, நாள்தோறும் தனது கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார் ஷிவானி.

இதில் சக போட்டியாளரான பாலாஜி முருகதாஸுடன் நெருக்கமாக பழகினார். பாலாஜிக்கு மாசாஜ் செய்வது, ஊட்டி விடுவது, காலையில் அவரை எழுப்பி விடுவது, அவருக்கு பணிவிடைகள் செய்வது என இருந்து வந்தார்

மேலும் இருவரும் ஒருவரை ஒருவர் நாமினேட் செய்யக் கூடாது என்ற அக்ரிமெண்டிலும் இருந்து வந்தனர். இதனால் இருவருக்கும் காதல் என்ற பேச்சு எழுந்தது. பிக்பாஸ் வீட்டில் இருந்த சக ஹவுஸ்மேட்டுகளான ரம்யா பாண்டியன் உள்ளிட்ட சிலரே ஷிவானியையும் பாலாஜியையும் வைத்து கிண்டலடித்தனர்.

இந்நிலையில் ஃபிரீஸ் டாஸ்க்கின் போது பிக்பாஸ் வீட்டிற்கு வந்த ஷிவானியின் அம்மா, பாலாஜியுடன் பழகுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பாலாஜிக்கு ஆயா வேலை செய்யதான் இங்கு வந்தீயா? என் மானத்தையே வாங்கிவிட்டாய் என ரைடு விட்டார். ஷிவானியின் அம்மா வைத்து வாங்கியதில் கதறி அழுதார் ஷிவானி.


ஆனால் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்தவுடன் ஷிவானி வீட்டு விசேஷத்தில் எல்லாம் பங்கேற்றார் பாலாஜி. ஷிவானி பிறந்தநாளின் போது பாலாஜிக்கு அவரது அம்மா கேக் ஊட்டி விட்டார். அந்த போட்டோக்கள் எல்லாம் வைரலானது. அதன் பிறகு பிக்பாஸ் டீம் வெளியில் சந்தித்த போதும் அவர்கள் ஒன்றாக எடுத்துக்கொண்ட போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வந்தது.

இந்நிலையில் நடிகை ஷிவானி நாராயணன் ஷேர் செய்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது, ஷிவானி, பாலாஜியுடன் இருக்கும் போட்டோவை இணையத்தில் ஷேர் செய்துள்ளார். அதில் பாலாஜிக்கு ரக்ஷா பந்தன் வாழ்த்து கூறியுள்ளார் ஷிவானி. 

இந்த நெட்டிசன், இதை எதிர்பார்க்கவில்லை.. சேர மாட்டார்கள் என்று தெரியும் அதற்காக இப்படியா... அண்ணன் தங்கைக்கான மரியாதையே போய்விட்டது என்று கூறியுள்ளார். மேலும் அட்மினே ஷிவானியின் அம்மாதான் என்றும் கூறியுள்ளார் நெட்டிசன்கள்.