கணவர் நாக சைதன்யாவை பிரிய இருப்பதாக நடிகை சமந்தா அதிகாரப்பூர்வ அறிவிப்பு...

நடிகை சமந்தா தனது கணவர் நாகசைதன்யாவை பிரிய இருப்பதாக தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார்.

கணவர் நாக சைதன்யாவை பிரிய இருப்பதாக  நடிகை சமந்தா  அதிகாரப்பூர்வ  அறிவிப்பு...

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா கடந்த 2017ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடந்த இவர்களின் திருமணத்திற்குப் பிறகு சமந்தா ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். சமந்தா ரூத் பிரபு என்று இருந்த தனது சமூக வலைதள பக்கங்களின் பெயரை நாக சைதன்யாவின் குடும்பப் பெயரான அக்கினேனியை சேர்த்து 'சமந்தா அக்கினேனி'என்று மாற்றினார்.

இந்நிலையில், சமந்தா அக்கினேனி என்ற பெயரை நீக்கிவிட்டு வெறும் 'S' என்று தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் சமீபத்தில் மாற்றியது நாக சைதன்யா - சமந்தா ஜோடி விவாகரத்து செய்யவிருக்கிறார்கள் என்ற வதந்தி பரவியது. அதேசமயம், தற்போது 'சகுந்தலம்' படத்தில் நடித்து வருவதால் என மாற்றினார் என்றும் சொல்லப்பட்டது.

சமீபத்தில் நடந்த நாகார்ஜுனா பிறந்த நாள் நிகழ்ச்சியில் சமந்தா பங்கேற்கவில்லை. அதேபோல், அமீர்கானுக்கு நாகார்ஜுனா குடும்பத்தினர் வீட்டில் விருந்து அளித்தனர். இதில் நாகார்ஜுனா, நாக சைதன்யா உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டனர். ஆனால், சமந்தா மட்டும் கலந்து கொள்ளவில்லை. இதன் மூலமும், இருவரும் விவாகரத்து செய்து பிரியப்போவது உறுதி என தகவல் வெளியானது.

ஆனால் சமந்தா - நாக சைதன்யா தரப்பில் இருந்து இது குறித்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. அதுமட்டுமில்லாமல், அவர்களது விவாகரத்து தொடர்பாக வெளியான வதந்திகள் மிகுந்த வேதனை அளிப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டனர். இந்நிலையில் நடிகை சமந்தா, தன்னைப் பற்றி தேவையில்லாத வதந்திகளும், அவதூறு செய்திகளும் வெளியாவதை தடுக்கும் விதமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் நடிகை சமந்தா, தனது கணவர் நாக சைதன்யாவை பிரியப்போவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இருவரும் பிரிந்தாலும் எங்கள் நட்பு தொடரும். இந்த தருணத்தில் ரசிகர்கள், ஊடகங்கள் மற்றும் நலம் விரும்பிகள் அனைவரும் எங்கள் தனிப்பட்ட வாழ்வு குறித்த வதந்திகளை பரப்பாமல் ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.