நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது... நடிகை கஸ்தூரியின் புதிய பதிவு...

சமூக வலைதளத்தில் ரஜினியை விமர்சித்து நடிகை கஸ்தூரி சர்ச்சை பதிவு

நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது... நடிகை கஸ்தூரியின் புதிய பதிவு...
நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள அமெரிக்கா சென்றதை விமர்சித்து நடிகை கஸ்தூரி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். கொரோனா காரணமாக இந்தியாவில் இருந்து நேரடி பயணத்தை அமெரிக்கா தடை செய்துள்ளது. மருத்துவ விலக்குகளும் வழங்கப்படவில்லை. இருப்பினும் தடையை மீறி ரஜினிகாந்த் எப்படி அமெரிக்காவிற்கு பயணம் செய்தார் என்றும் இதுகுறித்து ரஜினி தெளிவுப்படுத்த வேண்டும் என கேள்வி எழுப்பினார்.
 
இந்த பதிவு ரஜினி ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்திய நிலையில் தங்களது எதிர்ப்புகளை கமெண்டுகளாக பதிவு செய்து வந்தனர். ரசிகர்களின் எதிர்ப்பை தொடர்ந்து கஸ்தூரி தனது டுவிட்டரில் புதிதாக வெளியிட்ட பதிவில், நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது என்றும் என் உள்மன கலக்கமும் முடிவுக்கு வந்தது என்றும் கூறியுள்ளார்.  பூரண நலமுடன் புது பொலிவுடன் தலைவரை வரவேற்க தயாராகட்டும் தமிழகம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.