பாத் டப்பில் சோப் நுரைகளுக்கு மத்தியில்  ஜொலிக்கும் ஆண்ட்ரியா...! குளிக்கும் போதும் கூட செல்ஃபியா...? தெறிக்கும் கமெண்ட்ஸ்கள்

பாத் டப்பில்  சோப் நுரைகளுக்கு மத்தியில்  ஜொலிக்கும் ஆண்ட்ரியா...! குளிக்கும் போதும் கூட செல்ஃபியா...? தெறிக்கும் கமெண்ட்ஸ்கள்

தமிழ் சினிமாவில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ’கண்ணும் கண்ணும் நோக்கியா’ என்ற பாடல் மூலம் பாடகியாக அறிமுகமாகிய நடிகை ஆண்ட்ரியா, தனது குரல் வளத்தால் முன்னணி பாடகியாக திகழ்ந்து வந்தார். தொடர்ந்து கதாநாயகியாக அறிமுகமான இவர் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொண்ட படங்களில் நடித்து ரசிகர்களிடையே தனிவரவேற்பை பெற்றார்.

அந்தவகையில் தற்போது இயக்குனர் மிஸ்கின் இயக்கி வரும் பிசாசு 2 படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் பல திரைப்படங்களில் பின்னணி பாடல்களை பாடிவரும் இவர் சமீபத்தில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் பங்கேற்ற ’ஊ சொல்றியா மாமா’ பாடலை பாடி ரசிகர்களிடையே தனி இடத்தை பெற்றுள்ளார். 

மேலும்  சமூகவலைத்தளப் பக்கங்களில்  ஆக்டிவ்வாக இருக்கும் ஆண்ட்ரியா தனது சுற்றுலா புகைப்படங்களை அவ்வபோது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். 

இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா பாத் டப்பில் குளிக்கும் போது சோப் நுரைகளுக்கு மத்தியில்  ஜாலியாக செல்ஃபி எடுத்து அதை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதற்கு ‘#weekend vibes' என்ற கேப்ஷனோடு பகிர்ந்துள்ள  இந்த புகைப்படங்கள் அனைத்தும் தற்போது இணையத்தில் வேறலெவல் கமெண்ட்ஸ்களோடு வைரலாகி வருகிறது.