புதுச்சேரி முதல்வரை சந்தித்த நடிகர் விஜய் சேதுபதி... காரணம் என்ன?

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை  நடிகர் விஜய் சேதுபதி நேரில் சந்தித்து சினிமா படப்பிடிப்பு கட்டணத்தை குறைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.  

புதுச்சேரி முதல்வரை சந்தித்த நடிகர் விஜய் சேதுபதி... காரணம் என்ன?

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை  நடிகர் விஜய் சேதுபதி நேரில் சந்தித்து சினிமா படப்பிடிப்பு கட்டணத்தை குறைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழ் திரையுலகில் மக்கள் செல்வனாக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தற்போது ‘காத்துவாக்குல இரண்டு காதல்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கும் இப்படத்தில் நயன்தாரா, சமந்தா ஆகியோர் கதாநாயகியாக நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை, நடிகர் விஜய் சேதுபதி கோரிமேட்டில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று நேரில் சந்தித்து பேசினார்.அப்போது,அவர் புதுவையில் இதுவரை சினிமா படப்பிடிப்புக்கு என்று ஒரு நாளைக்கு 5 ஆயிரம்ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது 28 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதனால் சிறிய பட்ஜெட்டில் படம் தயாரிக்கும் நிறுவனங்கள் அனைத்தும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றன.

எனவே புதுச்சேரியில் சினிமா படப்பிடிப்பு கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கமாறு நடிகர் விஜய் சேதுபதி கோரிக்கை விடுத்தார்.இந்த கோரிக்கையை ஏற்ற முதல்வர் ரங்கசாமி இதுதொடர்பாக பரிசீலனை செய்வதாக உறுதி அளித்துள்ளார்.