ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கிய நடிகர் விஜய் சேதுபதி…  

திரைப்பட தொழிலாளர்களுக்கு குடியிருப்பு அமைக்க நடிகர் விஜய் சேதுபதி ரூபாய் 1கோடி நன்கொடையாக வழங்கி உதவினார்.

ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கிய நடிகர் விஜய் சேதுபதி…   

திரைப்பட தொழிலாளர்களுக்கு குடியிருப்பு அமைக்க நடிகர் விஜய் சேதுபதி ரூபாய் 1கோடி நன்கொடையாக வழங்கி உதவினார்.

2010 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களால் 100 ஏக்கர் நிலம் திரைப்பட தொழிலாளர்களுக்கு பனையூரில் வழங்கப்பட்டது. பெப்சி சமமேலன தலைவர் ஆர். கே செல்வமணி அவர்களின் முயற்சியால் சங்க உறுப்பினர்களுக்கு குடியிருப்பு அமைப்பதற்கான முதற்கட்ட நிகழ்வாக நடிகர் விஜய் சேதுபதியின் கொடை விழா நிகழ்ச்சி சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் பாக்யராஜ், இயக்குனர் ஆர். பி உதயகுமார்,தயாரிப்பாளர் தாணு, பெப்சி சமமேலன தலைவர் ஆர். கே செல்வமணி, மேலும் பெப்சி சங்கத்தின் நிர்வாகிகள், எழுத்தாளர் சங்கம், ஒளிப்பதிவாளர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் திரைப்பட தொழிலாளர்களுக்கு குடியிருப்பு அமைக்க நிதி உதவியாக ரூபாய் ஒரு கோடிக்கான காசோலையை பெப்சி சங்கம் சமமேலன தலைவர் ஆர்கே செல்வமணி உள்ளிட்ட அனைத்து சங்கம் நிர்வாகிகளிடம் நடிகர் விஜய் சேதுபதி வழங்கினார்.