திருமணமான பத்தே மாதங்களில், பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்!

திருமணமான பத்தே மாதங்களில், பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்!

திருவாரூரில், திருமணமான பத்தே மாதங்களில், இளம்பெண் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி மகள் அஞ்சலி தேவி(28). இவருக்கும் அருகில் உள்ள தில்லைவிளாகம் செங்காங்காடு கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம்(32) என்பவருக்கும் கடந்த 10மாத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. 

அஞ்சலி தேவி கணவன் வீட்டில், கணவருடன் வசித்து வந்துள்ளார். இந்தநிலையில் இன்று  காலை பார்த்தபோது வீட்டின் ஒரு அறையில் உள்ள பேனில் அஞ்சலி தேவி சடலமாக தூக்கில் தொங்கியுள்ளார். இதுகுறித்து உறவினர்கள் முத்துப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், தூக்கில் சடலமாக தொங்கிய அஞ்சலி தேவி உடலை கைப்பற்றி திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். 

இந்தநிலையில் அஞ்சலி தேவியின் தாயார் ஆண்டாள்(55) முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில், தனது மகளுக்கும் செங்காங்காடு கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவருக்கும்  திருமணம் செய்து வைத்தோம். பன்னீர்செல்வம் மீன் பிடிக்க சென்றுவிட்டு, தினமும் குடிபோதையில் வீட்டிற்கு வந்து எனது மகளிடம் தகராறு செய்து வந்துள்ளார். 

இதனால், கடந்த வாரம் எனது மகள் (அஞ்சலி தேவி) கோபம் அடைந்து எனது வீட்டிற்கு வந்டுவிட்டர். பின்னர் மருமகன் பன்னீர்செல்வம், இனிமேல் இப்படி நடக்காது என்று கூறி அழைத்து சென்றார். பின்னர் கணவரும் மாமியாரும் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்வதாகவும் எனது மகள் கூறினார்.

இந்தநிலையில் தற்போது எனது மகள் (அஞ்சலிதேவி) தூக்கில் தொங்கிய நிலையில் இறந்துள்ளார். எனவே எனது மகள் மரணத்தில் சந்தேகம் உள்ளது. உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் செய்துள்ளார். 

அந்த மனுவை பெற்றுக்கொண்டு வழக்கு பதிவு செய்த போலீசார் அஞ்சலி தேவி கணவன் மாமியார் தொந்தரவால் தற்கொலை செய்துக்கொண்டரா? அல்லது கொலை செய்து தொங்கவிடப்பட்டரா? என பல்வேறு கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள  அஞ்சலிதேவியின் கணவர் பன்னீர்செல்வம் மற்றும் மாமியார் ஆகியோரை தேடி வருகின்றனர். 

மேலும் திருமணம் ஆகி 10மாதங்களே உள்ளதால் ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தரவிட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில் திருமணம் ஆன புதுப்பெண் தூக்கில் தொங்கிய சம்பவம் அந்த கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க || திருமணம் செய்து வைக்க கோரி கொலை மிரட்டல் விடுத்த நபர்!