பல பெண்களுடன் தொடர்பு... செல்போனில் அந்தரங்க வீடியோக்கள்.... திறந்து பார்த்த மனைவி.. அப்புறம் அய்யயோ

வரதட்சனை கேட்டு அடித்து மனைவியை விரட்டி விட்டு பல பெண்களுடன் தொடர்பில் இருந்த கணவன் மீது புகார்.

பல பெண்களுடன் தொடர்பு... செல்போனில் அந்தரங்க வீடியோக்கள்.... திறந்து பார்த்த மனைவி.. அப்புறம் அய்யயோ

மதுரை நாராயணபுரம் சிவமணி தெருவைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான சுபாஷினி, அலங்காநல்லூர் ராஜமாணிக்கம் என்பவரது மகன் முத்துசங்கு என்ற காவலருக்கும்  கடந்த 2019ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

திருமணத்தின் போது முத்து சங்கு சார்பு ஆய்வாளராக வேலை செய்கிறார் என  பொய் கூறி திருமணத்தை நடத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி திருமணத்தின் போது வரதட்சணையாக ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் 25 பவுன் தங்க நகைகள் பெண் வீட்டின்சார்பாக கொடுக்கப்பட்டுள்ளது,   

இதனைத்தொடர்ந்து திருமணமான 3 மாதத்தில் சுபாஷினியிடம்  மேலும் வரதட்சணை பணம் கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இருவீட்டார் இடையே பிரச்சனை அவ்வபோது நிலவி வர, இருவரும் பிரிந்து தனித்தனியாக இருந்துள்ளனர். 

 இது தொடர்பாக கடந்த 2020 ஆம் ஆண்டு காவலர் முத்துசங்கு மீது அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  மீண்டும் காவலர் முத்து சங்கு தனது பெற்றொருடன் கடந்த பத்து  தினங்களுக்கு முன்பு பேச்சுவார்த்தை நடத்தினர்.  இதனை நம்பி  கணவருடன் சென்ற  சுபாஷினியை பல்வேறு வகையில் பாலியல் துன்புறுத்தல் செய்து உள்ளார். 

அவரது மொபைல் போனை  சுபாஷினி ஆய்வு செய்த போது பல பெண்களுடன் ஆபாசமாக பேசியது, தொடர்பில் இருந்ததும், ஆபாசமான படங்களையும் வீடியோக்களையும் பல பெண்களுக்கு ஷேர் செய்ததும் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து சுபாஷினி இன்று மதுரை மாநகர காவல் ஆணையரிடம்  பாலியல் ரீதியாக துன்புறுத்தும் கணவர் முத்து சங்கு மீது தக்க நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.