கற்களால் தாக்கி ஒன்றரை வயது குழந்தை கொல்லப்பட்ட அதிர்ச்சி!

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அருகே ஒன்றரை வயது குழந்தை கற்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கற்களால் தாக்கி ஒன்றரை வயது குழந்தை கொல்லப்பட்ட அதிர்ச்சி!

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அருகே ஒன்றரை வயது குழந்தை கற்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை அருகேயுள்ள காவேரிப்பாக்கம் பகுதியை சேந்தவர் ஆறுமுகம் - கனிமொழி தம்பதி. இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகளான நிலையில் கபிலேஷ் என்ற ஒன்றரை வயதில் குழந்தை ஒன்றும் இருந்துள்ளது. இந்நிலையில் கனிமொழி 9 மாத கர்ப்பிணியாக உள்ளதால், அவர் தனது தாய் வீடான பனப்பாக்கத்திற்கு குழந்தையுடன் சென்றுள்ளார். இதனிடையே கடந்த சனிக்கிழமை இரவு குழந்தையின் தலையில் அடிப்பட்டதாக கூறி வாலாஜா பேட்டையில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால் குழந்தையின் தலையில் ஏற்பட்ட காயம் தற்செயலாக ஏற்பட்டது இல்லை என காவல் நிலையத்துக்கு மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து குழந்தையின் தாய் கனிமொழி மற்றும் அவரது பெற்றோர் உள்ளிட்டோரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.